எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
டோனி விளையாடிய 90 டெஸ்ட் போட்டிகளில் 60 டெஸ்டில் தலைமை வகித்து அணிக்கு 27 வெற்றிகளை தேடித் தந்தார். இந்நிலையில் 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் உலக கோப்பைக்கு பிறகு 2 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக டோனி கூறி சென்றார். இந்நிலையில் டோனியின் எதிர்காலம் குறித்தும் ஓய்வு பெறுவது குறித்தும் அவரே முடிவு எடுப்பார், அவரை ஓய்வு பெற வற்புறுத்தக்கூடாது. மேலும் ஒய்வு குறித்து டோனியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இது தொடர்பாக பேசுகையில், டோனியின் எதிர்காலம் குறித்து 24-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். அப்போது டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் ஆலோசனை நடத்தப்படும். மேலும் டோனியுடனும் கருத்து கேட்கப்படும். பின்னர் எனது கருத்தை தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


