முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 28, 29-ம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில், அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி நகர்ந்து சென்று விட்டதால் தமிழகத்தில் மழை குறைந்து விட்டது என்றும் 2 நாட்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து