முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் நியூசி வீரர் டிரென்ட் போல்ட்யை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : 2020 - ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் நியூசிலாந்து  வீரர் டிரென்ட் போல்ட்யை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஐ.பி.எல். டி - 20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் எப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. 2020 ம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடக்கிறது.

இந்த ஏலத்திற்கு முன் 8 அணிகளும் தங்களுடைய வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்றுக் கொள்ளலாம். மற்ற அணிகளிடம் இருந்து வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். இரண்டும் இல்லை என்றால், வீரர்களை விடுவிக்கலாம். இதற்கான காலக்கெடும் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய டிரென்ட் போல்ட்- ஐ மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. போல்ட் 2014-  ஐ.பி.எல். தொடரில் அறிமுகம் ஆனார்.

டெல்லி அணிக்காக 2018 மற்றும் 2019 சீசனில் விளையாடினார்.டெல்லி அணியில் ரபாடா விளையாடியதால், டிரென்ட் போல்டால் ஆடும் லெவன் அணியில் நிலையாக இடம் பிடிக்க முடியவில்லை. 2019 சீசனில் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல். தொடரில் 33 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். அதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த ராஜ்பூட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறியுள்ளது. இவர் 2018 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 14 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து