எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மு.க.ஸ்டாலினின் புகாருக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.
இது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு புதிய மாவட்டங்களை திட்டமிட்டு பிரித்துள்ளதாகவும் இப்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் ஓட்டு பெறக்கூடிய ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் இனி 5 ஆயிரம் ஒட்டு பெறக்கூடிய வகையில் பிரித்து ஆளுங்கட்சி தேர்தலை நடத்தப் போகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். மேலும் தேர்தலை நிறுத்த சொல்லி ஒரு வார்த்தை கூட கூறாமல் உள்ளாட்சித்தேர்தலை நிறுத்துவதற்கும் ஆளும்கட்சி திட்டமிட்டு வருகிறதோ என சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2016-ம் ஆண்டில் உள்ளாட்சித்தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்தபின்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 21-9-2016 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் இந்த தீர்ப்பை எதிர்த்தும் மீண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியும் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ளது. எனினும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றுத்தான் தமிழ்நாடு அரசு, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்யும் வகையில் 21 -7-2017 ஆம் ஆண்டில் தனது அறிவிக்கையின் மூலம் எல்லை வரையறை ஆணையத்தை ஏற்படுத்தியது. மேற்படி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளின் மறுசீரமைப்பு அறிவிக்கை 2018-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது. மேலும் மறுசீரமைக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர், மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு மற்றும் மாவட்ட அரசிதழ்களில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.
கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மறுவரையறை செய்யப்பட்ட உள்ளாட்சி வார்டுகளின் அடிப்படையிலை வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளை துரிதமாக முடித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கான ஆயத்தப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அரசை குறை சொல்லும் நோக்கில் இது போன்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது. பல்வேறு மாவட்டங்களை பிரிப்பது என்பது அப்பகுதியில் வாழும் மக்களின் நெடுநாளைய கோரிக்கை. அதை ஏற்று செயல்படுத்துவது நிர்வாக நடைமுறையாகும். 2020-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் பூர்வாங்க பணிகள் தொடங்க இருப்பதால் டிசம்பர் 31-ம் தேதிக்கு பின்னர் எந்த வொரு நிர்வாக அலகையும் புதிதாக ஏற்படுத்தவோ அல்லது அதை குறைக்கவோ இயலாது. எனவே மக்களின் கோரிக்கைக்கு ஏற்பட முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியை தமிழ்நாடு அரசு விரைவாக முடித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளது.
புதிய மாவட்டங்களை தோற்றுவித்தும் அவற்றின் எல்லைகளை வரையறுத்தும் வெளியிடப்பட்ட அரசாணைகள் பத்தி 7-ல் உள்ளாட்சி வார்டுகளின் மறுசீரமைப்பு பணி முடிவுற்றுள்ளதாலும் சுப்ரீம் கோர்ட் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி ஏற்கனவே தொடங்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதாலும் தற்போது புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதாலும் இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட எல்லை வரையறைப்படி நடைபெறும் இந்த தேர்தல் பணிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை என தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற பின்னர் அரசால் அவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படுவதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. 2018-ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சித்தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் விரைவில் நடத்தமுடிக்கப்படும் என்று தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்குங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
12 Mar 2026சென்னை, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
-
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
12 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
த.வெ.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கற்பனையே: எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம்
12 Mar 2026திருச்சி, த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று.
-
சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி
13 Mar 2026தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
கள்ளச்சந்தையில் விற்க சிலிண்டர்கள் பதுக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
13 Mar 2026மதுரை, மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத


