எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை நிலவுவதைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் நேற்று 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் பகுதியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மேற்கு ஆசியாவில் நடக்கும் போரால் இந்தியாவுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் கே.சி. வேணுகோபால், ‘‘ஆட்சியாளர்கள் யதார்த்தத்தில் வாழவில்லை. அவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள். எங்கள் தொகுதிகளில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். தேசிய தலைநகரிலும் மக்கள் துன்பப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த யதார்த்தம் அவர்களை பாதிக்கவில்லை. அவர்கள் வாழும் உலகம் வேறாக உள்ளது. பொதுமக்களுடன் அவர்கள் இல்லை. இந்த அரசின் தவறான அணுகுமுறையாலும் வெளியுறவுக் கொள்கையாலுமே பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த விஷயம் குறித்து ராகுல் காந்தியை பேசவிடாமல் செய்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறும்போது, “நாம் அமைதிக்கான ஆக்கப்பூர்வமான குரலாக ஒலிக்க வேண்டும். இந்த மோதல் நம்மை கடுமையாக பாதித்துள்ளது. இது மற்ற நாடுகளையும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் எரிசக்தி விநியோகத்தையும் எரிசக்தி பாதுகாப்பையும், வளைகுடா நாடுகளில் வாழும் 90 லட்சம் இந்தியர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பையும் பாதிக்கப் போகிறது. நமது பல சர்வதேச உறவுகள் இதனால் ஆபத்துக்குள்ளாகி உள்ளன.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுப்பதே உலக நலனுக்கு உகந்தது. இதில் நாம் ஒரு முன்னணி குரலாகத் திகழ வேண்டும். புவியியல் ரீதியாக நாம் அருகில் இருப்பதால், நமக்கு இழப்பு அதிகம். இதனால் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.
சிபிஐ எம்.பி. சந்தோஷ் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் குறிப்பாக பெரு நகரங்கள்தோறும் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கிராமங்களில்கூட சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளது. உண்மையான குற்றவாளி யார்? எல்.பி.ஜி. விநியோகம் எவ்வித இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அவர்கள் ஏன் எங்களை குறைகூற வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


