எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டில் 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசு மேற்கொண்டது. இந்த ஒப்பந்தங்கள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 அமெரிக்க நிறுவனங்களுடன் ஏற்கனவே கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் மதிப்பில் 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களையும் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார். 28 கோடியே 43 லட்ச ரூபாய் மதிப்பில் 2 புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இணையதளம் வெளியீடு
அதை தொடர்ந்து திறன் மேம்பாட்டு ஆய்வறிக்கை மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். டி.ஆர்.ஓ. மற்றும் ஐ.ஐ.டி. சென்னை நிறுவனங்களுடன் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த நிகழ்வில் கையெழுத்தானது. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயரை வெளியிட்டதோடு தொழில் நிறுவனங்களுக்கான குறைதீர்க்க உதவும் தொழில் நண்பன் என்ற இணையதளத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
முதல்வர் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடாகும். மறைந்த முதல்வர் அம்மாவுக்கு தமிழகத்தை உற்பத்தியில் உலகத் திறன் வாய்ந்ததாக அமைக்கும் வகையில் ஒரு தொலைநோக்கு பார்வை இருந்தது. அந்த பார்வைக்கு ஏற்ப, முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ல் நடைபெற்றது, இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
2-வது முதலீட்டாளர்கள் மாநாடு
அம்மாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, எனது அரசு இந்த ஆண்டு ஜனவரியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் இரண்டாவது மாநாட்டை நடத்தியது. இதில் ரூ .3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அனைத்து புரிந்துணர்வு திட்டங்களுக்கும் எனது அரசாங்கம் திடமான ஆதரவை உறுதி செய்துள்ளது. இதன் விளைவாக, இன்றுவரை, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மேலும் 219 திட்டங்கள் செயல்படுத்த பல்வேறு கட்டங்களில் உள்ளன.
புதிய வேலைவாய்ப்புகள்
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக எனது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2019 வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், கடந்த 10 மாதங்களில் மட்டும் 63 புதிய புரிந்துணர்வு திட்டங்களை அரசு ஈர்த்துள்ளது. இதன் மூலம் 83,800 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் முதலீடுகள் அடங்கும்.
மிகவும் திறமையான மனிதவளம் மற்றும் அமைதியான சட்டம் ஒழுங்கு தமிழகத்தை முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக மாற்றியுள்ளது. தமிழகத்தை ஒரு விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாற்ற டி.ஆர்.டி.ஓ மற்றும் ஐ.ஐ.டி, மெட்ராசுடனான அறிவார்ந்த ஒத்துழைப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
தலைமைச் செயலாளரின் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான எங்கள் முயற்சிகளை நாங்கள் புதுப்பித்து வருகிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், டாக்டர் நிலோபர் கபில், கே. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கே சண்முகம், டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ் ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லக்கில் நாட் கதிரறுப்பு விழா.
- நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருசாபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
30 Jan 2026


