எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : களியக்காவிளையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 7 பேர் காஞ்சிபுரத்தில் சிக்கியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் கியூபிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு விரைவில் மாற்றப்பட உள்ளது
குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8-ம் தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை வைத்து போலீசார் துப்பு துலங்கி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக கியூ பிரிவு போலீசார், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு அமைப்பினர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் காஞ்சிபுரத்தில் இருந்து பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகளை சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து செல்போன் கடைகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே ஒரு கடையில் இருந்து சிம்கார்டுகளை வாங்கி இருப்பது தெரியவந்தது. இதே போல மேலும் 2 கடைகளிலும் சிம்கார்டுகளை பயங்கரவாதிகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகளை சப்ளை செய்தது தொடர்பாக கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்கள் 7 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து கியூபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் செல்போன் கடைகளில் இருந்து பயங்கரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை போலி முகவரியை கொடுத்து வாங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் ஒருவரான அப்துல் சமீம் குமரி மாவட்டத்தில் பதுங்கி இருந்து சப்-இன்ஸ் பெக்டரை கொலை செய்த நிலையில் அவரது கூட்டாளிகளான காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் ஆகிய இருவரும் டெல்லியில் பிடிபட்டனர். இவர்களுக்கு செல்போன்களை வாங்கி கொடுத்ததாக பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு 6 பேர் பிடிபட்டனர். இதன் பின்னர் பெங்களூரில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த பலரை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரையில் 10 பேர் வரை கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக உசேன்செரீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி சப்-இன்ஸ் பெக்டர் வில்சனை கொலை செய்து விட்டு பயங்கரவாதிகள் இருவரும் கேரளா வழியாக பெங்களூருக்கு தப்பி சென்றுள்ளனர். பெங்களூர் சென்றதும் அங்கு சிவாஜி நகரில் வசித்து வரும் உசேன்செரீப் இரண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார். அதே போல பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் மற்றவர்களும் இவரது வீட்டிலேயே பதுங்கி இருந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரில் கைது செய்யப்பட்ட மெகபூப் பாட்சா, முகமது மன்சூர்கான் இருவருடன் உசேன்செரீப்பும் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். மூன்று பேரிடமும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான 2 பயங்கரவாதிகளும் இன்று போலீஸ் காவலில் எடுக்கப்பட உள்ள நிலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் கியூபிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு விரைவில் மாற்றப்பட உள்ளது. இதன் பிறகு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அப்போது பயங்கரவாதிகளின் சர்வதேச தொடர்பு பற்றியும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.