எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்காக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். இதில், நீர்வளத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
பாசன ஏரிகளைப் புனரமைப்பதற்காக 510.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் 1,364 நீர்ப்பாசனப் பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும். 2020-2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.5,000 ஊராட்சி ஒன்றியங்களில் பராமரிப்பில் உள்ள சிறிய பாசன ஏரிகள், கிராம ஊராட்சிகளின் பராமரிப்பில் உள்ள 25 ஆயிரம் குளங்கள் மற்றும் ஊரணிகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக, சிறப்பு ஒதுக்கீடாக 500 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 750 கோடி ரூபாய் நிதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் உள்ள 30 ஆயிரம் பணிகளில் 21 ஆயிரத்து 444 பணிகள் நிறைவடைந்துள்ளன. 2020-2021 ஆம் ஆண்டில் கிராமங்களில் மீதமுள்ள குளங்கள் மற்றும் ஊரணிகள் ஆழப்படுத்துதல், நகர்ப்புறங்களில் உள்ள கோயில் குளங்கள் புனரமைப்பு ஆகிய பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கொண்டு ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும். இவை நிலத்தடி நீர் அமைப்புகளை செறிவூட்டுவதுடன், மிக அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட ஒன்றியங்களில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். 2020-2021-ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள கால்வாய்களில் 392 தூர்வாரும் பணிகளை அடுத்த பருவமழைக் காலத்திற்கு முன்னதாக, நிறைவு செய்வதற்காக, 67.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரிப் படுகையில் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை விரிவாக்கல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லணை கால்வாய் அமைப்பின் பணிகள், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 2,298 கோடி ரூபாய் மதிப்பீட்டுடன் மேற்கொள்ளப்படும். 2020-2021 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கென 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1,560 கோடி ரூபாய் செலவில் பருவகால மாற்ற தழுவல் திட்டத்தைச் செயல்படுத்தும் பணி காவிரி பாசனப் பகுதியில் முழுவீச்சில் முன்னேற்றமடைந்து வருகிறது. இத்திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 105.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,995 கோடி ரூபாய் திட்டச் செலவில் என்.ஆர். உப வடிநிலத்தில் ஏனைய பகுதிகளை இத்திட்டத்தில் இரண்டாம் கட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளையும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு செய்து வருகிறது.கட்டளை உயர்மட்ட கால்வாய் பணிக்காக 335.50 கோடி ரூபாயும் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நொய்யல் துணைப்படுகை திட்டம், 184 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ராஜகால்வாய் திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வெள்ள உபரிநீரினை மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தின் வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான சாரபங்கா நீரேற்று பாசனத் திட்டம் 565 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 493.25 கோடி ரூபாய் செலவில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கதவணை மற்றும் 387.60 கோடி செலவில் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கான 11 ஆயிரத்து 250 கோடி மதிப்பீட்டிலான முதல்நிலை திட்ட அறிக்கை இந்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திடத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் முதல்கட்ட திருத்தச் செலவினம் 703.49 கோடி ரூபாயுடன், 89 அணைகளும் 2 பாசனப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைகளுக்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் ஜூன், 2020 வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 610.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 அணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2 கட்டங்களுக்கும் சேர்த்து 2020-2021 பட்ஜெட்டில் 220.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் 2,962 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.
18 உப வடிநில பகுதிகளில், 1,325 குளங்கள் மற்றும் 107 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 45 செயற்கை செறிவூட்டல் கிணறுகளை நிறுவுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குளங்கள் மற்றும் 2 முதன்மை பாசன கால்வாய்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் முதல்கட்டமாக 787.19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் ஜூலை 2023-ல் நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்டத்தில் 16 உப வடிநில பகுதிகளில் 906 குளங்கள், மற்றும் 183 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் கட்டுமான பணிகள் 649.55 கோடி செலவில் 2020-2021 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் 583.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், 7,267 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்படுதல் மற்றும் முதல் நிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2014-2015 முதல் 2019-2020 ஆம் ஆண்டு வரை 2,241.19 கோடி மதிப்பீட்டிலான நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய குளங்களை உருவாக்குதல் புதிய அணைக்கட்டுகளை கட்டுதல் மற்றும் புதிய பாசன வாய்க்கால்களை அமைப்பதற்கான 307 பணிகளை செயல்படுத்தியதில் 261 பணிகள் நிறைவடைந்து மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020-2021 பட்ஜெட்டில் நபார்டு உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த 655.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2020-2021 பட்ஜெட்டில் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தி 6,991.89 கோடி ரூபாயாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
27 Oct 2025கோலாலம்பூர் : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்தார்.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடக்கம்
27 Oct 2025கொல்கத்தா : 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
27 Oct 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆப்கான் எல்லையில் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி
27 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் சம்பவத்தில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
-
எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும்: பேச்சாளர்களுக்கு அமைச்சர் அறிவுரை
27 Oct 2025மதுரை : பேச்சாளர்கள் தங்களது பேச்சு மீளாய்வு செய்யப்படும் என்ற எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும், ’’ என்று உலகத்தமிழ் சங்க விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவி
-
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை
27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
பயங்கரவாதிகள் பட்டியலில் பிரபர நடிகர் சல்மான்கான்..? பின்னணியில் பாகிஸ்தான் அரசு
27 Oct 2025லாகூர், பிரபர நடிகர் சல்மான்கானை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
-
உலகத்தின் நுழைவாயிலாக ‘இந்தியா கேட்’ மாறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
27 Oct 2025மும்பை : நிகோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் நமது கடல்சார் வர்த்த கத்தை பலமடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தியா கேட்’ விரைவில
-
தெருநாய் விவகாரம்: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாத 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
27 Oct 2025புதுடெல்லி : தெருநாய் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் வரும் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத
-
லித்துவேனியாவில் விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்களால் விமான சேவை நிறுத்தம்
27 Oct 2025வில்னியஸ் : லித்துவேனியாவில் விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்களால் விமான சேவை நிறுத்தப்பட்டது.


