முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள்: அதிர்ச்சி தகவல்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

இட்லிப் : சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

சிரியாவில்  அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும்  கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே  கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும்,  கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.

சிரியா உள்நாட்டுப் போரில் கடந்த 4 மாதங்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 

சிரியாவின் வடமேற்கு பிராந்தியத்திலிருந்து டிசம்பர் தொடக்கம் முதல் 9 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். போதுமான தங்குமிடம் இல்லாததால் 82 ஆயிரம் பேர் பேர் உறைபனியில்  திறந்தவெளியில் வாழ்கின்றனர், மரங்களுக்கு அடியில் அல்லது பனி வயல்களில் குடியேறி உள்ளனர் . முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் குளிரால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து