முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று: உலகம் முழுவதும் 42,000- க்கும் மேற்பட்டோர் பலி

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 40,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இது குறித்து அமெரிக்காவில் செயல்படும் மருத்துவப் பல்கலைக் கழகமான ஜான் ஹோப்கின்ஸ் கூறும் போது,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் 42,322 பேர் பலியாகினர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று சுமார் 190-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவைப் பெரும்பான்மையான நாடுகள் விதித்துள்ளன.மேலும், மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு சுமார் 1,88,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கொரோனா வைரசுக்கு அதிக அளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து