எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகிவிடும் என்றும் முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 17 ஆக, இருக்கிறது. மேலும் 21 ஆய்வகங்கள் துவங்க தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசு அனுமதி கொடுத்ததும் 38 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்படப் போகிறது. முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர் என அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கலெக்டர்களுடன் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் சண்முகம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் பேட்டி
கூட்ட முடிவுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதனை தடுக்க அரசு முழு வீச்சுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளேன். இன்றும் ஆலோசனை நடத்தினேன். அரசு சார்பில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். அனைத்து கலெக்டர்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
571 பேருக்கு பாதிப்பு
இன்று வரை தமிழகத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 90 ஆயிரத்து 541 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 10 ஆயிரத்து 814 பேருக்கு 28 நாள் வீட்டு கண்காணிப்பு முடிந்து விட்டது. தமிழகத்தில் 621பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 11 ம், தனியாரிடம் 6 பரிசோதனை மையங்களும் உள்ளன. இதுதவிர மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். இதனையும் சேர்த்து மொத்தம் 38 ஆய்வகங்கள் செயல்படும் நிலை இருக்கும். இதன் மூலம் வேகமாக துரிதமாக பரிசோதனை நடக்கும். 3,371 வெண்டிலேட்டர்கள் இப்போது உள்ளன. தேவையான முக கவசங்களும் மருத்துவ உபகரணங்களும் உள்ளன.மேலும் 2 ஆயிரத்து 500 வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய இன்று ஆர்டர் கொடுத்துள்ளோம்.
ரேபிட் சோதனை உபகரணங்கள்
ரேபிட் சோதனை உபகரணங்கள் ஒரு லட்சம் எண்ணிக்கையில், வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரிய ஆய்வு கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவு வெளியாகிவிடும். அதன் பிறகு வேக வேகமாக பரிசோதனை முடிவுகள் வெளியாகும். சீனாவில் இருந்து இந்த உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த உபகரணங்கள் 9 -ந் தேதி கிடைத்து விடும். 10 - ந் தேதி முதல் பரிசோதனை செய்யப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் வேகமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள், உணவு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. நானே நேரடியாக சென்று உதவிகளை பார்வையிட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளேன்.வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கக் கூடிய தமிழர்களுக்கு உரிய உதவிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதை அந்த மாநில முதல்வர்களை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழகத்தில், 268 முகாம்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எத்தனை வழக்குகள்
ஊரடங்கு மற்றும் தடை உத்தரவை மீறியதாக 94 ஆயிரத்து 873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 94 ஆயிரத்து 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 72 ஆயிரத்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. மத்திய அரசு முதல் கட்டமாக 500 கோடி தந்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நிதி உள்ளது. முன்னுரிமை கொடுத்து நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தொற்று நோய் அதிகரித்து வருகிறதே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, இந்த நோயின் தாக்கம், வீரியம் பற்றி மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறோம். பத்திரிகையாளர்களான நீங்களும் சொல்கிறீர்கள். மக்கள் தங்களை தனிமைப்படுத்தினால் இந்த நோய் வராது. இதனை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வதுதான். எனவே மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.தொற்று நோய் எளிதாக பரவக் கூடியது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அறிகுறி தெரியாமலும் வருகிறது
கொரோனா நோய் அறிகுறி தெரியாமலேயே பாசிட்டிவ் வந்துள்ளது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். இதனை கடைப்பிடித்தால் பரவுவதை தடுக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டம் கொண்டு வருவது மக்களை துன்புறுத்த அல்ல, மக்கள் நலன் கருதித்தான் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் நோயின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். இதனை உணர்ந்து கடைப்பிடித்தால் நிச்சயம் தடுக்க முடியும். சட்டம் போடுகிறோம். அதனை நடைமுறைப்படுத்துவது மக்கள் தான் என்றும் அவர் கூறினார்.
நடமாட்டத்தை குறைக்க வேண்டும்
மக்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடமாடும் காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி கடைகளில் விற்பனை செய்ய சொல்லி இருக்கிறோம். படிப்படியாக மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை அரசு செய்கிறது.நோய் வருவது இயற்கை. வந்தால் அதனை குணப்படுத்துவது நமது கடமை. நோய் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் குடும்பத்தை காப்பாற்றலாம். நாட்டையும் காப்பாற்றலாம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பள்ளிகள் திறப்பு எப்போது ?
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர்,
21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகுதான் பள்ளித்தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார்.மேலும் அரிசி, ரேசன்கார்டு தாரர்களுக்கு மட்டுமே அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி உதவியுடன் நடமாடும் காய்கறி கடைகள் சென்னையில் தொடங்கப்பட உள்ளதாகவும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை, சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.