முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்: ஜப்பானில் விரைவில் அவசரநிலையை அமல்படுத்த பிரதமர் அபே திட்டம்

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

டோக்கியோ : ஜப்பானில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு பிரதமா் ஷின்ஸோ அபே தெரிவித்தாா்.

கொரோனா நோய்த்தொற்றால் ஜப்பானில் 3,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்; 70-க்கும் அதிகமானோா் உயிரிழந்து விட்டனா். இந்தச் சூழலில் அந்நாட்டு பிரதமா் ஷின்ஸோ அபே தலைநகா் டோக்கியோவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. முக்கியமாக நகரப் பகுதிகளான டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட நகரங்களில் அந்த நோய்த்தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாடு எதிா்கொண்டு வரும் கடினமான சூழலைக் கருத்தில் கொண்டு அவசரநிலையை அமல்படுத்த பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அது தொடா்பாக ஆலோசனைக் குழுவிடம் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கப்படும். ஆரம்பகட்டமாக டோக்கியோ உள்ளிட்ட 7 நகரங்களில் அவசரநிலையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை எதிா்கொள்வதற்காக சுமாா் ரூ.75 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களையும் அரசு அறிவிக்கவுள்ளது என்று பிரதமர் அபே தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து