முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 331 கோடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப் பணிகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், சென்னை,  அரியலூர், தஞ்சாவூர், ஈரோடு,  தேனி,  கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தருமபுரி, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 296 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமைகளாகும். இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.  மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த  பட்லூர் மற்றும் 30 குடியிருப்புகளுக்கு 6 கோடியே 21 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டம், தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த  அரண்மனைப்புதூர் மற்றும் 4 குடியிருப்புகளுக்கு ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம்; போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோடாங்கிப்பட்டி மற்றும் 3 குடியிருப்புகளுக்கு 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில்  மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் 2 குடியிருப்புகளுக்கு 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், நத்தம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள குடிநீரைப் பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 20 ஊரகக் குடியிருப்புகளுக்கு 3 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், மைலம்பாடி ஊராட்சியில் உள்ள 54 குடியிருப்புகளுக்கு 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள வரதநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அபிவிருத்தி  செய்து வழங்கும் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம், 

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு 30 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் 75 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டம், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் நகராட்சி, விருத்தாசலம் சாலையில் உள்ள வாரச் சந்தை வளாகத்தில் 2 கோடியே 10  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டிடம்,  தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி, காந்திஜி சாலையில் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகக்  கட்டிடம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி, கணேசபுரத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் அரசு  பொது மருத்துவமனை வளாகத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம்,

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கொட்டிவாக்கம், பாலவாக்கம்,  பெருங்குடி மற்றும் முகலிவாக்கம்  ஆகிய பகுதிகளுக்கு 126 கோடியே 39 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டிலான  விரிவான குடிநீர் வழங்கும் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாவட்டம்,   திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட மல்லிகாபுரம், அடையாறு  மண்டலத்திற்குட்பட்ட  வேளச்சேரி ஆகிய இடங்களில்  ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  2  நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் சோழிங்கநல்லூர்  மண்டலத்திற்குட்பட்ட  ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில்  21 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புர சமூகநல மருத்துவமனைகள், பேரூராட்சிகள்  நிர்வாகம் சார்பில்  சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பேரூராட்சியில்  ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடம், மதுரை மாவட்டம்,  பாலமேடு பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம்,  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும்  வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம், திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியில்  ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், தருமபுரி மாவட்டம்,  காரிமங்கலம் பேரூராட்சியில்  ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடம், இராணிப்பேட்டை மாவட்டம்,  காவேரிப்பாக்கம் பேரூராட்சியில்  ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம் என மொத்தம் 330 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என். மகேஸ்வரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர்  டி.என். ஹரிஹரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து