எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சவுதம்டன் : உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்து இருக்கும் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.
3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13-ம் தேதி சிட்னியில் காலி மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. 117 நாட்கள் இடைவெளிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் மீண்டும் களம் திரும்புகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நீண்ட நாட்கள் நடைபெறாமல் தடைப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா தொற்று எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த போட்டியில் மோதும் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் அனைவரும் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தை ஒட்டி இருக்கும் ஓட்டலில் மருத்துவ பாதுகாப்பு வசதிகளுக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு பயிற்சியை தொடங்கிய இரு அணியினரும் பலமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் களம் காணுகிறார்கள்.
143 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வித்தியாசமான சூழ்நிலையில் நடக்க இருக்கும் இந்த போட்டிக்கான புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வீரர்கள் தாங்கள் பயன்படுத்தும் கண்ணாடி, தொப்பி உள்ளிட்ட உடமைகளை நடுவரிடம் (வழக்கமாக பந்து வீசும் போது கொடுப்பது உண்டு) வழங்கக் கூடாது.
சக வீரர்களிடமும் கொடுக்கக் கூடாது. வீரர்கள் உடலோடு உரசி மகிழ்ச்சியை கொண்டாடுவதையும், குளிர்பானம், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன் பந்து மீது எச்சிலை தேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை தொட்ட பிறகு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கட்டுப்பாட்டை மீறி பந்தில் எச்சிலை தேய்த்தால் இன்னிங்சில் 2 முறை எச்சரிக்கை விடுக்கப்படும்.
அதனையும் மீறினால் பவுலரை தண்டிக்கும் விதமாக 5 ரன்கள் பெனால்டியாக விதிக்கப்படும். போட்டியின் போது வீரர்கள் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவருக்கு தகுந்த மாற்று வீரரை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது உள்பட பல தற்காலிக வழிகாட்டுதல்கள் இந்த போட்டி தொடரில் அமல்படுத்தப்படுகிறது.
ரசிகர்களின்றி மயான அமைதிக்கு மத்தியில் வழக்கத்துக்கு மாறான முறையில் அரங்கேற இருக்கும் இந்த போட்டியை உலகமே உற்று நோக்கி வருகிறது. கொரோனாவின் கொடூரத்தால் 44 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களை பறிகொடுத்து இருக்கும் இங்கிலாந்து அதனை கண்டு அஞ்சாமல் சவாலாக இந்த போட்டியை நடத்துகிறது.
இந்த போட்டியின் வெற்றியை பொறுத்தே மற்ற நாடுகள் தங்களது கிரிக்கெட் நடவடிக்கைகளை தொடங்கலாம் என்று வழிமேல் விழிவைத்து காத்து இருக்கிறது. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த போட்டியை டெலிவிஷன் மூலம் அதிக ரசிகர்கள் கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு
05 Jul 2025பியூனோஸ் அயர்ஸ், பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கனமழை காரணமாக இமாசலில் 69 பேர் பலி
05 Jul 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
அஜித்குமார் தாயார், தம்பிக்கு ஆறுதல் தெரிவித்த ஓ.பி.எஸ்.
05 Jul 2025திருப்புவனம் : போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்தார்.
-
தி.மு.க. கூட்டணிக்குதான் வெற்றி: கனிமொழி எம்.பி.
05 Jul 2025திருநெல்வேலி : வெற்றி என்பது நிச்சயமாக தி.மு.க. கூட்டணிக்கு தான் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
05 Jul 2025சென்னை, பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.