முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எடியூரப்பா

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் முதல்வரின் வீடு மற்றும் அலுவலகத்தில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.  

இந்நிலையில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் எடியூரப்பா நேற்று முதல் சில நாட்களுக்கு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், வீட்டில் இருந்தே அலுவலக பணிகளை காணொலி வாயிலாக கவனிக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். 

பொதுமக்கள் பாதுகாப்பாக தனிமனித இடைவெளியை பின்பற்றி, மாஸ்க் அணிந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து