முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8.5 லட்சமாக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,49,533 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 20 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மொத்த எண்ணிக்கை 8,49,533 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,34,620 பேர் குணமடைந்துள்ளனர். 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மட்டும் 2,80,151 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 2,46,600 பேரும், தமிழகத்தில் 1,34,226 பேரும், டெல்லியில் 1,10,921 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து