எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 27.7.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடும் வகையில், 8 தொழில் திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 23,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், CapitaLand நிறுவனத்தால் கட்டப்படும் International Tech Park Chennai, Radial Road தகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம்.
கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 350 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், TATA Chemicals நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Nissei Electric நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 26.9.2019 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது),
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த Usui Susira நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம், Mahindra World City தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Dinex நிறுவனத்தின் Diesel Engine-களுக்கான Exhaustஉற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25.5.2020 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது).
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Steel Shoppe நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.
கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 47 கோடி ரூபாய் முதலீட்டில், 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் MRC Mills நிறுவனத்தின் Textiles processing திட்டம்.
விழுப்புரம் மாவட்டம், கம்பூர் கிராமத்தில், 16 கோடி ரூபாய் முதலீட்டில் 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Sri Raajarajeshwari Life Careநிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம். இந்த நிறுவனம் COVID-19 நிவாரண மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது.
என மொத்தம் 8 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 2,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வானூர்தி தொழிற்பூங்காவில், டிட்கோ மற்றும் டைடல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்புக்கான AERO HUB உயர்நுட்ப தொழில் மையத்திற்கும் முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 3,185 கோடி ரூபாய் முதலீட்டில், 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார். இந்த 11 திட்டங்களில், 8 திட்டங்கள் நேரடியாகவும், 3 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் துவக்கி வைக்கப்பட்டது. அதன்படி,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள CapitaLand தொழிற் பூங்காவில் 730 கோடி ரூபாய் முதலீட்டில் 875 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த TPI Composites நிறுவனத்தின் Wind blades உற்பத்தி திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 608 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Glovis Hyundai நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள் Knitting / Packaging திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, Sojitz Motherson நிறுவனத்தின் தொழிற் பூங்கா திட்டம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் 625 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட Rajapayalam Mills நிறுவனத்தின் Textile fabrics உற்பத்தி திட்டம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 220 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Gulf Oil நிறுவனத்தின் Oil lubricants திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 80 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், JMatadee நிறுவனத்தின், கிடங்கு திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 75 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Hibrow Healthcare நிறுவனத்தின், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம், சிப்காட் சிறுசேரி தொழில் நுட்பப் பூங்காவில் 24 கோடி ரூபாய் முதலீட்டில் 330 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், TCS நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்ப சேவைகள் (Phase I)திட்டம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 451 கோடி ரூபாய் முதலீட்டில் 1150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், Mothi Spinners,Lucky Yarn Tex மற்றும் Lucky Weavess நிறுவனங்களின் நூல்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தி திட்டங்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள Indospace தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் 75 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Mahindra Steel Services நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.
காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 47 கோடி ரூபாய் முதலீட்டில் 950 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Teemage Builders நிறுவனத்தின் கட்டுமான பொருட்கள் உற்பத்தி திட்டம். என மொத்தம் 11 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 3,185 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,955 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட 8 திட்டங்களில், 6 திட்டங்கள், 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும். அதேபோன்று, வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட 11 திட்டங்களில், 2 திட்டங்கள் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், 8 திட்டங்கள் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு -2019ல், 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. 27.7.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 8 திட்டங்களையும் சேர்த்து, இதுவரை 81 திட்டங்கள், அதாவது 26.64 சதவீத திட்டங்கள், தமது வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன.
மேலும் 191 திட்டங்கள், அதாவது 62.82 சதவீத திட்டங்கள், பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில் 89.46 சதவீதம் (அதாவது 272/304) திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2015ல், 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4,70,065 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
27.7.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 2 திட்டங்களையும் சேர்த்து, 44 திட்டங்கள் நிறைவு பெற்று வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன. 27 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில், 72 சதவீத திட்டங்கள் (அதாவது 71/98) செயல்பாட்டு நிலையில் உள்ளன.
2019-2020ஆம் ஆண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) சார்பில் 37 கோடியே 3 லட்சத்து 3 ஆயிரத்து 205 ரூபாய் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் 40 கோடி ரூபாய் பங்கு ஈவுத் தொகைக்கான காசோலைகளை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தமிழக முதல்வரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச்செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மைச்செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர். நீரஜ் மித்தல், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தலைவர் குமரகுருபரன் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் அனீஷ்சேகர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
01 Dec 2025புது டெல்லி, சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவ
-
55.3 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் புதிய உச்சம் தொட்டது
01 Dec 2025சென்னை, 55.3 சதவீத மதிப்பெண்களுடன் எரிசக்தி திறனில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்
01 Dec 2025கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து எதிர்பாராமல் உயிரிழக்கும் ரவுடி சூப்பர் சுப்பராயனை, அவரது மகன் சுனில் தேடி வருகிறார்.
-
கனமழை எதிரொலி: புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
01 Dec 2025சென்னை : சென்னை புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
-
மகர விளக்கு சீசன்:கடந்த 15 நாட்களில் சபரிமலையில் ரூ.92 கோடி வருவாய்
01 Dec 2025திருவனந்தபுரம், மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
-
உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளர் இந்தியா: ஜனாதிபதி முர்மு பெருமிதம்
01 Dec 2025புதுடெல்லி, உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு, விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய
-
தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பார்லி., மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கேக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
01 Dec 2025கொழும்பு, இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு
01 Dec 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
01 Dec 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு
01 Dec 2025சென்னை, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
-
விராட் கோலி குறித்து யான்சென்
01 Dec 2025விராட் கோலி போன்ற உலகத் தரத்திலான வீரர்கள் நன்றாக ரன்கள் குவித்து விளையாடத் தொடங்கிவிட்டால், அவர்களை தடுத்து நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என தென்னாப்பிரிக்க அண
-
மீண்டும் உச்சத்தை தொட்ட ஒரு சவரன் தங்கம் விலை..! ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது
01 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.
-
வெங்கட் பிரபு வெளியிட்ட அனலி பர்ஸ்ட் லுக்
01 Dec 2025சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், தினேஷ் தீனா இயக்கியுள்ள படம் அனலி. சிந்தியா லூர்டே முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை
-
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்க குளங்கள் அமைக்க வேண்டும்: ஐகோர்ட்
01 Dec 2025சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை ப
-
எஸ்.ஐ.ஆர். பணிசுமையால் உ.பி.யில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
01 Dec 2025லக்னோ : வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்து கொண்டார்.
-
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
01 Dec 2025சென்னை, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அஞ்சான் (ரீ எடிட்) திரை விமர்சனம்
01 Dec 2025மும்பை தாதா சூர்யா, அவரது நண்பர் வித்யுத்.
-
துல்கர் சல்மானின் 40-வது படம் ஐ அம் கேம்
01 Dec 2025துல்கர் சல்மானும், ஜோம் வர்கீசும் இணைந்து தயாரிக்கும் படம் ஐ அம் கேம்.
-
அவர் பெரிய தலைவர் இல்லை: இ.பி.எஸ். விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில்
01 Dec 2025கோவை : எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
-
கார்கே, ராகுல் தலைமையில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இன்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: முதல் நாளே முடங்கியது மக்களவை
01 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் மக்களவை முதல
-
18 மணி நேரம் கட்சிப் பணி செய்கிறேன்: திருமாவளவன்
01 Dec 2025வேலூர், 18 மணி நேரம் கட்சிப் பணி செய்கிறேன் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆதங்கத்துன் தெரிவித்துள்ளார்.
-
டித்வா புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
01 Dec 2025சென்னை, டித்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 151 ஆக உயர்வு
01 Dec 2025ஹாங்காங், ஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 151 பேர் ஆக உயர்ந்துள்ளது.


