எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 27.7.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடும் வகையில், 8 தொழில் திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 23,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், CapitaLand நிறுவனத்தால் கட்டப்படும் International Tech Park Chennai, Radial Road தகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம்.
கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 350 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், TATA Chemicals நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Nissei Electric நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 26.9.2019 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது),
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த Usui Susira நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம், Mahindra World City தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Dinex நிறுவனத்தின் Diesel Engine-களுக்கான Exhaustஉற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25.5.2020 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது).
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Steel Shoppe நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.
கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 47 கோடி ரூபாய் முதலீட்டில், 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் MRC Mills நிறுவனத்தின் Textiles processing திட்டம்.
விழுப்புரம் மாவட்டம், கம்பூர் கிராமத்தில், 16 கோடி ரூபாய் முதலீட்டில் 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Sri Raajarajeshwari Life Careநிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம். இந்த நிறுவனம் COVID-19 நிவாரண மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது.
என மொத்தம் 8 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 2,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வானூர்தி தொழிற்பூங்காவில், டிட்கோ மற்றும் டைடல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்புக்கான AERO HUB உயர்நுட்ப தொழில் மையத்திற்கும் முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 3,185 கோடி ரூபாய் முதலீட்டில், 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார். இந்த 11 திட்டங்களில், 8 திட்டங்கள் நேரடியாகவும், 3 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் துவக்கி வைக்கப்பட்டது. அதன்படி,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள CapitaLand தொழிற் பூங்காவில் 730 கோடி ரூபாய் முதலீட்டில் 875 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த TPI Composites நிறுவனத்தின் Wind blades உற்பத்தி திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 608 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Glovis Hyundai நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள் Knitting / Packaging திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, Sojitz Motherson நிறுவனத்தின் தொழிற் பூங்கா திட்டம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் 625 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட Rajapayalam Mills நிறுவனத்தின் Textile fabrics உற்பத்தி திட்டம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 220 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Gulf Oil நிறுவனத்தின் Oil lubricants திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 80 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், JMatadee நிறுவனத்தின், கிடங்கு திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 75 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Hibrow Healthcare நிறுவனத்தின், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம், சிப்காட் சிறுசேரி தொழில் நுட்பப் பூங்காவில் 24 கோடி ரூபாய் முதலீட்டில் 330 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், TCS நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்ப சேவைகள் (Phase I)திட்டம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 451 கோடி ரூபாய் முதலீட்டில் 1150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், Mothi Spinners,Lucky Yarn Tex மற்றும் Lucky Weavess நிறுவனங்களின் நூல்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தி திட்டங்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள Indospace தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் 75 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Mahindra Steel Services நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.
காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 47 கோடி ரூபாய் முதலீட்டில் 950 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Teemage Builders நிறுவனத்தின் கட்டுமான பொருட்கள் உற்பத்தி திட்டம். என மொத்தம் 11 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 3,185 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,955 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட 8 திட்டங்களில், 6 திட்டங்கள், 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும். அதேபோன்று, வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட 11 திட்டங்களில், 2 திட்டங்கள் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், 8 திட்டங்கள் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு -2019ல், 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. 27.7.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 8 திட்டங்களையும் சேர்த்து, இதுவரை 81 திட்டங்கள், அதாவது 26.64 சதவீத திட்டங்கள், தமது வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன.
மேலும் 191 திட்டங்கள், அதாவது 62.82 சதவீத திட்டங்கள், பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில் 89.46 சதவீதம் (அதாவது 272/304) திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2015ல், 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4,70,065 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
27.7.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 2 திட்டங்களையும் சேர்த்து, 44 திட்டங்கள் நிறைவு பெற்று வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன. 27 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில், 72 சதவீத திட்டங்கள் (அதாவது 71/98) செயல்பாட்டு நிலையில் உள்ளன.
2019-2020ஆம் ஆண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) சார்பில் 37 கோடியே 3 லட்சத்து 3 ஆயிரத்து 205 ரூபாய் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் 40 கோடி ரூபாய் பங்கு ஈவுத் தொகைக்கான காசோலைகளை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தமிழக முதல்வரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச்செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மைச்செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர். நீரஜ் மித்தல், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தலைவர் குமரகுருபரன் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் அனீஷ்சேகர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லக்கில் நாட் கதிரறுப்பு விழா.
- நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருசாபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
30 Jan 2026


