எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் ரூ.1.64 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, 14,512 பயனாளிகளுக்கு ரூ.103 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அத்திட்டங்களை அனைத்து கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நிர்வாகத்தினை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக அரசு, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு பல்வேறு கடன் வசதிகளை அளித்தும், சிறுகுறு விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியும், நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தான சேவை புரிந்து வருகிறது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன், உரம், விதை உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகராட்சி பகுதி, எரியோடு, வேடசந்தூர் வட்டத்தில் இ.சித்தூர் ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறையின்
மூலம் செயல்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யும் கூட்டுறவு சில்லரை விற்பனைநிலையங்கள் ஏற்கனவே துவங்கி வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதனையடுத்து, பழனி சரகத்தில் பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், பெரிய கலையம்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், திண்டுக்கல் மார்க்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், சிறுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட புதிய அலுவலக கட்டிடம், நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடம், லிங்கவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் சேவைக்காக 56 வாகனங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 157 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 28,819 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான பொருட்கள் கிடைக்க வேண்டுமென்ற உயரிய எண்ணத்தோடு கூட்டுறவுத்துறை ஏழை எளிய மக்களின் தேவையை அறிந்து அத்தியாவசிய தேவையான பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, சேவை மனப்பான்மையுடன், லாபம் நோக்கோடு இல்லாமல் விற்பனை செய்து வருகிறது. பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 41 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து 42-வது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையமாக திண்டுக்கல் மாவட்டம், பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 10 பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிலையங்கள் புதியதாக தமிழகம் முழுவதும் துவக்கப்படவுள்ளன.
அம்மாவின் ஆட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டு மகளிர் பொருளாதார மேம்பாட்டைய வழிவகுக்கப்பட்டது.
கோவிட் -19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினருக்கு குறைந்தது ரூ.5,000 அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
நியாயவிலைக் கடைகளுக்கு அருகிலேயே அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 5 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் 300 வகையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அம்மா சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் துவங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு நாளது தேதி வரை மாநில அளவில் 813 கடைகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 51 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
இந்தியா - சீனா இடையேயான கருத்து பரிமாற்றம் முக்கியம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
14 Jul 2025பெய்ஜிங் : இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு