எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒவ்வொருஆண்டும் எதிர்கொள்ளும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் கடந்த 12ம் தேதி தலைமை செயலாளர் உள்பட அனைத்து துறை செயலாளர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
வெள்ளம் வருமுன்பு, வந்த பின், வெள்ளம் வடிந்த பின்னர் ஆகிய 3 நிலைகளில் என்னென்ன நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
1076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தமிழக கடற்கரை, இந்தியா அளவில் 18 சதவீதம் கடலோர பகுதியை தமிழகம் கொண்டுள்ளது. சூறாவளி, வறட்சி, புயல் என ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருகிறோம்.
அதே போன்று நிலச்சரிவு, கடல் அலை, கடல் அரிப்பு, இடி, மின்னல் என பருவமழை காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கடந்த 30 ஆண்டுகால பேரிடர் கால அனுபவங்களை கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்கப்பெறுகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து, இதன் மூலம் 47.32 சதவீதம் மழை அளவு கிடைக்கிறது.
இந்த மழையை சேமித்து வைத்து குடிநீர் மற்றும் விவசாயம் போன்ற பணிகளுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் குடிமாமரத்து பணிகள்மூலம் பணிகள்மேற்கொள்ளப்பட்டு, மழைநீரை சேமித்து வைக்க ஆய்த்தமாக உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள ஆணைகள்,ஏரிகள் எனஅனைத்து நீர்நிலைகளையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், மாநிலத்தில் மொத்தம் 4133 பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன.அதில் 321 பகுதிகள் மிகவும் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் எனவும், 797 பகுதிகள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதி எனவும், 1096 பகுதிகள் மிதமான பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் எனவும், 1919 பகுதிகள் குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்பிற்குள்ளாகும் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளுக்கு முறையே குறுவட்ட மற்றும் வார்டு அளவில், பாதிப்பின் தன்மை குறித்தஆய்வு, பேரிடர் காலத்தில் காத்துக் கொள்ள வெளியேறும் வழி மற்றும் நிவாரணமையங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அளித்திடவும், தேடுதல், மீட்பு, பாதிப்பிற்குள்ளாகும் பருதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வாகிக்கவும்662 பல்துறை மண்டலக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தப்படி. 1000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் அனைத்துமாவட்டங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, ஊர்க்காவல் படையினைச் சார்ந்த 691 நபர்களும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரால் பயிற்சி அளிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
4,699 தீயணைப்பு வீரர்கள், 9859 பாதுகாக்கும் தன்னார்வலர்களும் பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,094 கல்விநிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். இவர்களில் 14,232 மகளிர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் தயார்நிலையில் உள்ளனர்.
பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்காகவும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடவதற்கும் 9,909 முதல்நிலை மீட்பாளர்கள் தயாராக உள்ளனர். அதுமட்டுமின்றி பாம்பு பிடிக்கும் திறன்உடையவர்கள், நீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டங்களில் 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 ஜேசிபி இயந்திரங்கள், 2115 ஜெனரோட்டர்கள் மற்றும் 483 அதிக திறன்கொண்ட பம்பு செட்கள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளன.
தற்போது முன்னெச்சரிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களைமாற்றுஇடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்புமையங்கள் உட்பட 4713 தங்கும் மையங்களில் 7,39,450 நபர்களை தங்க வைக்க தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளி கடைபிடிக்கவும், முககவசம், கைகளை சுத்தம் செய்வது போன்ற பாதுகாப்பு மையங்களில் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி பள்ளிகள், திருமணமண்டபங்கள் மற்றும்சமுதாய கூடங்கள் என 4680 தங்கும் இடங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல், சூறாவளி காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுரைகள்அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடந்த 26.8.2020 அன்றுஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று மின்னல் தாக்கத்தின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய 2020 செயல்திட்டம் கடந்த 1.9.2020 அன்று மாவட்ட கலெக்டர்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைநடவடிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர், அனுபவமிக்க ஐஏஎஸ் அதிகாரிகள்கொண்ட குழு மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் மக்கள் ஒத்துழைப்பு, விழிப்புணர்வு மிக அவசியம், நீர் திறந்துவிடும் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில்உள்ள மக்கள் எச்சரிக்கையாக முகாம் தங்கி கொள்ள வேண்டும். மேலும் பழைய வீடுகளில் உள்ளவர்கள்தங்களது வீடுகளின்உறுதி தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தற்போது கொரோனா காலகட்டம் என்பதால்மிகுந்தமுன்னெச்சரிக்கையுடன் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்கும்மையங்களில் அரசினவழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறைந்தஅளவு மட்டுமே நபர்களை தங்கவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவறைகள், மருத்துவ முகாம்கள், தங்கும் மையங்கள் ஆகியவை கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளஅனைத்து வகையிலும் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது .இவ்வாறு அவர்கூறினார்,.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்