முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவனியாபுரத்தில் மருது பாண்டியர்கள் சிலைக்கு ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மாலையணிவித்தார்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவனியாபுரத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

மாமன்னர் மருது பாண்டியரின் 219-வது குருபூஜையை முன்னிட்டு அவனியாபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர்  மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார் ,மாவட்ட பொருளாளர் அம்பலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் , திருப்பங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பி.எஸ். துரைப்பாண்டி, மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் குலோத்துங்கன், வண்டியூர் பகுதி செயலாளர் ஆர். செந்தில்குமார், அவனியாபுரம் மேற்கு பகுதி செயலாளர் கருணா, அவனியாபுரம் கிழக்கு பகுதி செயலாளர் முருகேசன், மேலூர் நகர செயலாளர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், ஜெய கல்யாணி, வட்ட செயலாளர்கள் ஜி. கணேசமூர்த்தி, பால்பாண்டி சரவணன், கருத்தமுத்து, செல்லப்பாண்டியன், செல்வம், சத்தியமூர்த்தி ஜே கல்யாணி, பொன்முருகன் ,நாகரத்தினம், சுப்பிரமணி ,முருகேசன், ராஜ்குமார், என்.எஸ். பாலமுருகன், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து