முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுத்தை கறி விருந்து சாப்பிட்ட ஐந்து பேர் கேரளாவில் கைது

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : சிறுத்தை கறி விருந்து சாப்பிட்ட ஐந்து பேரை கேரள வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முனியாரா வனப்பகுதியில் சிலர் சிறுத்தை ஒன்றை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக மங்குளம் சரக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிலிருந்து 10 கிலோ சமைக்கப்பட்ட சிறுத்தையின் இறைச்சி, தோல், பற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக வினோத் (45), குரியகோஸ் (74) சி.எஸ். பினு (50), சாலி குஞ்சப்பன் (54) மற்றும் வின்சென்ட் (50) ஆகிய ஐந்து பேரை பிடித்து விசாரித்ததில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து, கொன்று சமைத்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து