எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 'விவசாயி' வீட்டுப் பிள்ளை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி தமிழகத்தில் அமைக்க சபதம் ஏற்போம் என்று முன்னாள் எம்.பி.யும், அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளருமான எஸ்.முத்துமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு:-
கோடிக்கணக்கான தமிழர் நெஞ்சங்களில் வாழும் அம்மாவின் 73-வது பிறந்த நாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நாடெங்கிலும் இன்று கொண்டாடப்படுகிறது.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் அம்மா. 1991, 2001 மற்றும் 2011, 2016 ஆகிய சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் கழகத்தை அமோகமாக வெற்றிபெறச் செய்து பல்வேறு சோதனைகளை முறியடித்து 6 முறை முதலமைச்சர் பொறுப்பேற்று நல்லாட்சி தந்தார்.
தன் இறுதி மூச்சுவரை புரட்சித்தலைவர் வழியில் அண்ணாவின் கொள்கையை பின்பற்றினார்.கடந்த 16-11-1992-ல் உச்சநீதிமன்றம் (9 நீதிபதிகள் அமர்வு) 'இந்திரவகானி' வழக்கில் இட ஒதுக்கீடு எந்த வகையிலும் 50 விழுக்காடுகளை தாண்டக் கூடாது என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பெரும் பாதிப்பை நிவர்த்தி செய்திட 69 சதவீத இட ஒதுக்கீடு தொடரும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து, அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 9-ன் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் 'சமூகநீதி காத்த வீராங்கனை' அம்மா .
அண்ணா, புரட்சித்தலைவர் வழியில் ஈழத் தமிழர் தம் உரிமைகள் காக்க போர்க்குரல் எழுப்பியும், தீர்மானங்கள் நிறைவேற்றியும், உலகத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கியவர் அம்மா. காவிரி நீர் பிரச்சினையில் இறுதி தீர்ப்பை 19-12-2013-ல் மத்திய அரசு கெஜட்டில் பதிவு செய்து காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் பங்கீடு குழு அமைக்க வழி வகுத்தார். பெரியாறு அணை நீர்மட்ட பிரச்சனையில் நமது உரிமையை நிலைநாட்டினார்.தமிழ்நாடு மீனவர்களின் அவலம் தீர மத்திய அரசை எதிர்த்து துணிவுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது நடைபெற்று வருகிறது.
காலத்தை வென்ற திட்டங்கள்
புரட்சித் தலைவரின் சத்துணவு திட்டம் அம்மா கொண்டுவந்த அரசு தொட்டில் குழந்தை திட்டம் ஆகியவை காலத்தை வென்ற திட்டங்களாகும். அம்மா உணவகம் ஏற்படுத்தி ஏழை,எளிய உழைக்கும் மக்களின் பசியைப் போக்கினார். அம்மா 'இலவசம்' என்ற வார்த்தைக்கு பதிலாக 'விலையில்லா' என்ற வார்த்தையை கண்டுபிடித்த சமூக 'அரசியல் விஞ்ஞானி' அம்மா. குடும்ப அட்டைக்கு விலையில்லா 20 கிலோ அரிசி, மிக்சி கிரைண்டர், ஃபேன், தாலிக்கு தங்கம், பெண்களுக்கு தொழில் தொடங்க தனி நபர் கடன், 30 சதவீத ஒதுக்கீடு, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு, மகளிர் சுய உதவி குழுக்கள் மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் நீதிமன்றங்கள், குழந்தை பாதுகாப்புக்கு 15 அம்ச திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு 40 சதவீத மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், பிறக்கும் குழந்தைக்கு பரிசுப்பெட்டகம், பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறைகள், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் சீருடை உள்ளிட்ட படிப்புக்கு தேவையான அனைத்து பொருட்கள் வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு மாடு வழங்கும் திட்டம், அனைத்து சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டம், அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா 100 யூனிட் மின்சாரம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் போன்றவை மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றன.
சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் சொட்டு நீர் பாசன திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், அன்னதான திட்டம், சில்லறை வணிகத்தில் தமிழ்நாட்டில் அந்நிய முதலீடு செய்ய விடாமல் தடுத்தது, நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடி ஒதுக்கியது, இஸ்லாமியருக்கு 'உலமா பென்சன்' உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 9,10-10-2015-ல் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியது, தமிழ்த்தாய் விருது, கபிலர், உ.வே. சாமிநாத அய்யர், கம்பர் மற்றும் தமிழ்ச் செம்மல் விருது உள்ளிட்ட 18 விருதுகள் வழங்கி ஆணை பிறப்பித்தார். டெல்லியில் ரூபாய் 50 லட்சம் செலவில் தமிழ் இருக்கை மற்றும் அமெரிக்காவில் 'ஹார்வார்ட்' பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடி செலவில் தமிழ் இருக்கை உருவாக்கியது எல்லாம் அம்மாவின் பெரும் சாதனைகள்.
அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டம் - அன்னை தெரசாவின் பாராட்டைப் பெற்றது. மழை நீர் சேகரிப்புத் திட்டம் - டாக்டர் அப்துல் கலாமின் பாராட்டை பெற்றது. சுனாமி நடவடிக்கைகள் - அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் பாராட்டையும், உலக நாடுகளின் பாராட்டையும் பெற்றது. இந்திய அரசியல் அரங்கில் முக்கிய முடிவுகள் எடுக்க பல பிரதமர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போன்றோர் நேரில் வருகை தந்து அவரை சந்தித்தது தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது மிகப்பெரிய பெருமையாகும்.
தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கைகளை காக்க தமிழர் இனமானம் காக்கும் வகையில் அண்ணாவின் அரசியல் கொள்கைகள் காக்க புரட்சித்தலைவரின் மனிதநேய திட்டங்கள் தொடர தமிழ்நாட்டின் உரிமைகள் காத்திட 'விவசாய வீட்டு பிள்ளை' அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் அமைத்திட இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்போம். திராவிட வெற்றி வரலாறு படைப்போம்.
எஸ்.முத்துமணி
முன்னாள் எம்.பி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
06 Jan 2026சென்னை, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
-
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
06 Jan 2026தஞ்சாவூர், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு இன்று உள்ளூர் விடுகுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறது தமிழ்நாடு அரசு: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
06 Jan 2026சென்னை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-01-2026
06 Jan 2026 -
தமிழகத்தில் வருகிற 9, 10-ம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் வருகிற 9. 10- மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
தேசிய சராசரியை தாண்டி தமிழ்நாடு புதிய சாதனை: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கையில் தகவல்
06 Jan 2026சென்னை, சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் வினியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியை தமிழ்நாடு விஞ்சியுள்ளதாக மாநில திட்டக் கு
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
06 Jan 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 12-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) சம்மன் அ
-
மாநில கல்விக்கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: வருகிற 25-ம் தேதிக்குள் மக்கள் கருத்துகளை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
06 Jan 2026சென்னை, மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்களுக்கு 25-ம் தேதி கருத்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
06 Jan 2026சென்னை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை நேற்று (ஜன. 6) ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் நடைமுறை வரும் 12-ம் தேதி முதல் அமல்
06 Jan 2026சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சோனியா மருத்துவமனையில் அனுமதி
06 Jan 2026புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் பயணம்
06 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
-
திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு: இந்தோனேசியாவில் 9 பேர் பலி
06 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
-
'உங்கள் கனவை சொல்லுங்க' திட்டம்: வரும் 8-ம் சென்னையில் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கனவை கேட்கும் திட்டம்தான் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் என தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில்மகேஷ், இந்த திட்டத்தை வருகிற 9-ம் தேதி முதல
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை தீர்ப்பு
06 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்றும் அரசின் மேல் முறையீட்டு மனுவை
-
4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்..!
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெரம்பலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி பெயர்கள் நீக்கம்
06 Jan 2026லக்னோ, தமிழகத்தை போன்றே உத்தரபிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முகமது சமி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன்
06 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விரும்பும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
06 Jan 2026காரகஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06 Jan 2026டோக்கியோ, ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி ஏற்படும் அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டது.
-
வெனிசுலாவில் தேர்தல் கிடையாது: ட்ரம்ப்
06 Jan 2026வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவ
-
தமிழக கவர்னருடன் இ.பி.எஸ் சந்திப்பு
06 Jan 2026சென்னை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார்.


