எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
							
						Source: provided
சென்னை : 'விவசாயி' வீட்டுப் பிள்ளை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி தமிழகத்தில் அமைக்க சபதம் ஏற்போம் என்று முன்னாள் எம்.பி.யும், அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளருமான எஸ்.முத்துமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு:-
கோடிக்கணக்கான தமிழர் நெஞ்சங்களில் வாழும் அம்மாவின் 73-வது பிறந்த நாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நாடெங்கிலும் இன்று கொண்டாடப்படுகிறது.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் அம்மா. 1991, 2001 மற்றும் 2011, 2016 ஆகிய சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் கழகத்தை அமோகமாக வெற்றிபெறச் செய்து பல்வேறு சோதனைகளை முறியடித்து 6 முறை முதலமைச்சர் பொறுப்பேற்று நல்லாட்சி தந்தார்.
தன் இறுதி மூச்சுவரை புரட்சித்தலைவர் வழியில் அண்ணாவின் கொள்கையை பின்பற்றினார்.கடந்த 16-11-1992-ல் உச்சநீதிமன்றம் (9 நீதிபதிகள் அமர்வு) 'இந்திரவகானி' வழக்கில் இட ஒதுக்கீடு எந்த வகையிலும் 50 விழுக்காடுகளை தாண்டக் கூடாது என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பெரும் பாதிப்பை நிவர்த்தி செய்திட 69 சதவீத இட ஒதுக்கீடு தொடரும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து, அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 9-ன் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் 'சமூகநீதி காத்த வீராங்கனை' அம்மா .
அண்ணா, புரட்சித்தலைவர் வழியில் ஈழத் தமிழர் தம் உரிமைகள் காக்க போர்க்குரல் எழுப்பியும், தீர்மானங்கள் நிறைவேற்றியும், உலகத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கியவர் அம்மா. காவிரி நீர் பிரச்சினையில் இறுதி தீர்ப்பை 19-12-2013-ல் மத்திய அரசு கெஜட்டில் பதிவு செய்து காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் பங்கீடு குழு அமைக்க வழி வகுத்தார். பெரியாறு அணை நீர்மட்ட பிரச்சனையில் நமது உரிமையை நிலைநாட்டினார்.தமிழ்நாடு மீனவர்களின் அவலம் தீர மத்திய அரசை எதிர்த்து துணிவுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது நடைபெற்று வருகிறது.
காலத்தை வென்ற திட்டங்கள்
புரட்சித் தலைவரின் சத்துணவு திட்டம் அம்மா கொண்டுவந்த அரசு தொட்டில் குழந்தை திட்டம் ஆகியவை காலத்தை வென்ற திட்டங்களாகும். அம்மா உணவகம் ஏற்படுத்தி ஏழை,எளிய உழைக்கும் மக்களின் பசியைப் போக்கினார். அம்மா 'இலவசம்' என்ற வார்த்தைக்கு பதிலாக 'விலையில்லா' என்ற வார்த்தையை கண்டுபிடித்த சமூக 'அரசியல் விஞ்ஞானி' அம்மா. குடும்ப அட்டைக்கு விலையில்லா 20 கிலோ அரிசி, மிக்சி கிரைண்டர், ஃபேன், தாலிக்கு தங்கம், பெண்களுக்கு தொழில் தொடங்க தனி நபர் கடன், 30 சதவீத ஒதுக்கீடு, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு, மகளிர் சுய உதவி குழுக்கள் மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் நீதிமன்றங்கள், குழந்தை பாதுகாப்புக்கு 15 அம்ச திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு 40 சதவீத மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், பிறக்கும் குழந்தைக்கு பரிசுப்பெட்டகம், பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறைகள், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் சீருடை உள்ளிட்ட படிப்புக்கு தேவையான அனைத்து பொருட்கள் வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு மாடு வழங்கும் திட்டம், அனைத்து சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டம், அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா 100 யூனிட் மின்சாரம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் போன்றவை மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றன.
சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் சொட்டு நீர் பாசன திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், அன்னதான திட்டம், சில்லறை வணிகத்தில் தமிழ்நாட்டில் அந்நிய முதலீடு செய்ய விடாமல் தடுத்தது, நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடி ஒதுக்கியது, இஸ்லாமியருக்கு 'உலமா பென்சன்' உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 9,10-10-2015-ல் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியது, தமிழ்த்தாய் விருது, கபிலர், உ.வே. சாமிநாத அய்யர், கம்பர் மற்றும் தமிழ்ச் செம்மல் விருது உள்ளிட்ட 18 விருதுகள் வழங்கி ஆணை பிறப்பித்தார். டெல்லியில் ரூபாய் 50 லட்சம் செலவில் தமிழ் இருக்கை மற்றும் அமெரிக்காவில் 'ஹார்வார்ட்' பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடி செலவில் தமிழ் இருக்கை உருவாக்கியது எல்லாம் அம்மாவின் பெரும் சாதனைகள்.
அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டம் - அன்னை தெரசாவின் பாராட்டைப் பெற்றது. மழை நீர் சேகரிப்புத் திட்டம் - டாக்டர் அப்துல் கலாமின் பாராட்டை பெற்றது. சுனாமி நடவடிக்கைகள் - அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் பாராட்டையும், உலக நாடுகளின் பாராட்டையும் பெற்றது. இந்திய அரசியல் அரங்கில் முக்கிய முடிவுகள் எடுக்க பல பிரதமர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போன்றோர் நேரில் வருகை தந்து அவரை சந்தித்தது தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது மிகப்பெரிய பெருமையாகும்.
தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கைகளை காக்க தமிழர் இனமானம் காக்கும் வகையில் அண்ணாவின் அரசியல் கொள்கைகள் காக்க புரட்சித்தலைவரின் மனிதநேய திட்டங்கள் தொடர தமிழ்நாட்டின் உரிமைகள் காத்திட 'விவசாய வீட்டு பிள்ளை' அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் அமைத்திட இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்போம். திராவிட வெற்றி வரலாறு படைப்போம்.
எஸ்.முத்துமணி
முன்னாள் எம்.பி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
 -   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 -   
          
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
 -   
          
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 -   
          
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
 -   
          
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
 -   
          
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
 -   
          
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
 -   
          
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
03 Nov 2025தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 -   
          
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது: இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள கனடா திட்டம்
03 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று நிலைப்பாட்டை அடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவு குறித்து கனடா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
 


