எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 'விவசாயி' வீட்டுப் பிள்ளை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி தமிழகத்தில் அமைக்க சபதம் ஏற்போம் என்று முன்னாள் எம்.பி.யும், அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளருமான எஸ்.முத்துமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு:-
கோடிக்கணக்கான தமிழர் நெஞ்சங்களில் வாழும் அம்மாவின் 73-வது பிறந்த நாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நாடெங்கிலும் இன்று கொண்டாடப்படுகிறது.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் அம்மா. 1991, 2001 மற்றும் 2011, 2016 ஆகிய சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் கழகத்தை அமோகமாக வெற்றிபெறச் செய்து பல்வேறு சோதனைகளை முறியடித்து 6 முறை முதலமைச்சர் பொறுப்பேற்று நல்லாட்சி தந்தார்.
தன் இறுதி மூச்சுவரை புரட்சித்தலைவர் வழியில் அண்ணாவின் கொள்கையை பின்பற்றினார்.கடந்த 16-11-1992-ல் உச்சநீதிமன்றம் (9 நீதிபதிகள் அமர்வு) 'இந்திரவகானி' வழக்கில் இட ஒதுக்கீடு எந்த வகையிலும் 50 விழுக்காடுகளை தாண்டக் கூடாது என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பெரும் பாதிப்பை நிவர்த்தி செய்திட 69 சதவீத இட ஒதுக்கீடு தொடரும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து, அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 9-ன் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் 'சமூகநீதி காத்த வீராங்கனை' அம்மா .
அண்ணா, புரட்சித்தலைவர் வழியில் ஈழத் தமிழர் தம் உரிமைகள் காக்க போர்க்குரல் எழுப்பியும், தீர்மானங்கள் நிறைவேற்றியும், உலகத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கியவர் அம்மா. காவிரி நீர் பிரச்சினையில் இறுதி தீர்ப்பை 19-12-2013-ல் மத்திய அரசு கெஜட்டில் பதிவு செய்து காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் பங்கீடு குழு அமைக்க வழி வகுத்தார். பெரியாறு அணை நீர்மட்ட பிரச்சனையில் நமது உரிமையை நிலைநாட்டினார்.தமிழ்நாடு மீனவர்களின் அவலம் தீர மத்திய அரசை எதிர்த்து துணிவுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது நடைபெற்று வருகிறது.
காலத்தை வென்ற திட்டங்கள்
புரட்சித் தலைவரின் சத்துணவு திட்டம் அம்மா கொண்டுவந்த அரசு தொட்டில் குழந்தை திட்டம் ஆகியவை காலத்தை வென்ற திட்டங்களாகும். அம்மா உணவகம் ஏற்படுத்தி ஏழை,எளிய உழைக்கும் மக்களின் பசியைப் போக்கினார். அம்மா 'இலவசம்' என்ற வார்த்தைக்கு பதிலாக 'விலையில்லா' என்ற வார்த்தையை கண்டுபிடித்த சமூக 'அரசியல் விஞ்ஞானி' அம்மா. குடும்ப அட்டைக்கு விலையில்லா 20 கிலோ அரிசி, மிக்சி கிரைண்டர், ஃபேன், தாலிக்கு தங்கம், பெண்களுக்கு தொழில் தொடங்க தனி நபர் கடன், 30 சதவீத ஒதுக்கீடு, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு, மகளிர் சுய உதவி குழுக்கள் மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் நீதிமன்றங்கள், குழந்தை பாதுகாப்புக்கு 15 அம்ச திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு 40 சதவீத மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், பிறக்கும் குழந்தைக்கு பரிசுப்பெட்டகம், பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறைகள், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் சீருடை உள்ளிட்ட படிப்புக்கு தேவையான அனைத்து பொருட்கள் வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு மாடு வழங்கும் திட்டம், அனைத்து சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டம், அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா 100 யூனிட் மின்சாரம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் போன்றவை மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றன.
சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் சொட்டு நீர் பாசன திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், அன்னதான திட்டம், சில்லறை வணிகத்தில் தமிழ்நாட்டில் அந்நிய முதலீடு செய்ய விடாமல் தடுத்தது, நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடி ஒதுக்கியது, இஸ்லாமியருக்கு 'உலமா பென்சன்' உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 9,10-10-2015-ல் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியது, தமிழ்த்தாய் விருது, கபிலர், உ.வே. சாமிநாத அய்யர், கம்பர் மற்றும் தமிழ்ச் செம்மல் விருது உள்ளிட்ட 18 விருதுகள் வழங்கி ஆணை பிறப்பித்தார். டெல்லியில் ரூபாய் 50 லட்சம் செலவில் தமிழ் இருக்கை மற்றும் அமெரிக்காவில் 'ஹார்வார்ட்' பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடி செலவில் தமிழ் இருக்கை உருவாக்கியது எல்லாம் அம்மாவின் பெரும் சாதனைகள்.
அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டம் - அன்னை தெரசாவின் பாராட்டைப் பெற்றது. மழை நீர் சேகரிப்புத் திட்டம் - டாக்டர் அப்துல் கலாமின் பாராட்டை பெற்றது. சுனாமி நடவடிக்கைகள் - அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் பாராட்டையும், உலக நாடுகளின் பாராட்டையும் பெற்றது. இந்திய அரசியல் அரங்கில் முக்கிய முடிவுகள் எடுக்க பல பிரதமர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போன்றோர் நேரில் வருகை தந்து அவரை சந்தித்தது தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது மிகப்பெரிய பெருமையாகும்.
தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கைகளை காக்க தமிழர் இனமானம் காக்கும் வகையில் அண்ணாவின் அரசியல் கொள்கைகள் காக்க புரட்சித்தலைவரின் மனிதநேய திட்டங்கள் தொடர தமிழ்நாட்டின் உரிமைகள் காத்திட 'விவசாய வீட்டு பிள்ளை' அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் அமைத்திட இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்போம். திராவிட வெற்றி வரலாறு படைப்போம்.
எஸ்.முத்துமணி
முன்னாள் எம்.பி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.