எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் புதிய குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
நகர்புறங்களில் சாலை அமைக்கும் போது நிலத்தடி நீர் சேமிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி, குளங்களை தூர்வாரும் போது இனி கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட மாட்டாது. சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை நீர், நதிகளில் கலக்காமல் தனியாக குழாய்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.2,500 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும். நகராட்சி நிர்வாகப் பணிகளுக்கான டெண்டர்களில் தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |