எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவையில் ரூ.225 கோடி மதிப்பில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:
* சுற்றுப்புறம் மற்றும் சூழலுக்கு பாதிப்பின்றி சுரங்கப் பணிகளை செயல்படுத்திட இந்த அரசு நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும்.
* இது தவிர, பசுமை சுங்க மேல்வரி விதிக்கப்பட்டு ஒரு பசுமை நிதியம் உருவாக்கப்படும். இதன் மூலம் கைவிடப்பட்ட குவாரிப் பகுதிகள் முறைப்படி மூடப்பட்டு பாதுகாக்கப்படும். ஆறு கோடி வருடங்களுக்கு முந்தைய உள்நாட்டு புதை வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ள அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில், புவியியல் புதைபடிவ பூங்கா ஒன்று பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி, கட்டமைப்பு, இதர சிக்கல்களை ஆய்வு செய்வதற்கும், இந்நிறுவனங்கள் வளர்ச்சி அடைய தேவைப்படும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். ந.சுந்தரதேவன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
* முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு கடன் அளித்தவர்கள் தங்களது கடன்களை மறு கட்டமைப்பு செய்ய முன்வந்தால், அரசு கடன் உத்தரவாதத்துடன் நிதி நிறுவனங்களின் உதவியுடன் கடன் வழங்கப்படும்.
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களின் நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிப்பதற்கான வழிவகைகளை உறுதி செய்வதற்கான வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடித் தளங்களின் கீழ் அனைத்து மாநில பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் கொண்டு வரப்படும்.
* 265 ஏக்கர் மொத்தப் பரப்பளவில் 5 இடங்களில் நில வங்கிகளை சிட்கோ நிறுவ உள்ளது. சிட்கோ தொழில்துறை பூங்காக்களில், விற்கப்படாத மனைகளை விரைவாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்காக விலைக் கொள்கை சீரமைக்கப்படும்.
* ஒற்றைச் சாளர அமைப்புமுறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேலும் 100 சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேலும் 110 சேவைகளும் ஒற்றைச் சாளர வலைவாசலின் கீழ் கொண்டு வரப்படும்.
* வளர்ந்து வரும் துறைகளில் தமிழகத்தின் பங்கை வலுப்படுத்துவதற்காக உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றிற்கான புதிய தொழில் கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர்களுடனான உறவு வலுப்படுத்தப்படும்.
* தமிழகத்தில் உள்ள தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.
* தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் 1,000 கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டத்தின் மாநல்லூரில் ஒரு மின்-வாகனப் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம், ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும். தொழில்துறை அலகுகளுக்காக தூத்துக்குடியில் 60 MLD அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஓசூரில் உள்ள தொழிலகங்களுக்கான 10 MLD TTRO கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.
* பழைய மாமல்லபுரம் சாலை தகவல் தொழில்நுட்ப துறை பெருவழியாக வளர்ச்சியடையவதற்கு, 2000 ஆம் ஆண்டில் சென்னையில் கருணாநிதியால் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது முக்கிய காரணமாகும். இப்போது தமிழகத்திலுள்ள நிலை II மற்றும் நிலை III நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக, விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
* ஓசூர், சேலம், திருச்சி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் பாதுகாப்பு தொழில்துறை பெருவழிகளை நிறுவுவதாக மத்திய அரசு அறிவித்த போதிலும், அதற்கான மத்திய அரசின் உதவி குறைவாகவே உள்ளது. கோயம்புத்தூரில், 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-08-2025.
20 Aug 2025 -
தங்கம் விலை குறைப்பு
20 Aug 2025சென்னை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
இயல்பு நிலைக்கு திரும்புகிறது மும்பை
20 Aug 2025மும்பை, இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது மும்பை.
-
தனது திருமண நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை
20 Aug 2025சென்னை : எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூற
-
ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு- அஸ்வின்
20 Aug 2025டெல்லி, ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு என்று அஸ்வின் கூறினார்.
-
இன்று த.வெ.க. மாநில மாநாடு: மதுரையில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
20 Aug 2025மதுரை : தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுவதால் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா: அமித் ஷாவுக்கு முதல்வர் கண்டனம்
20 Aug 2025சென்னை, அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்த அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
-
கேள்வி கேட்பதே தேச துரோகமா? - மூத்த பத்திரிகையாளர்களுக்கு அசாம் மாநில போலீஸ் சம்மன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
20 Aug 2025சென்னை : ‘தி வயர்’ ஊடகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் விடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர்
-
இடைத்தரகரை அணுக வேண்டாம்: பக்தர்களுக்கு திருப்பதி கோவில் தேவஸ்தானம் வேண்டுகோள்
20 Aug 2025திருமலை : இடைத்தரகரை அணுக வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைதாரர் பெயர்கள் நீக்கம்
20 Aug 2025ராஞ்சி, ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைதாரர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது.
-
தலைநகர் டெல்லியில் பரபரப்பு: 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
20 Aug 2025புதுடெல்லி : டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம்
20 Aug 2025சென்னை, தேசிய சீனியர் தடகள 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம் பெற்றார்.
-
நெல்லை பூத் கமிட்டி மாநாட்டுக்கு போலீஸ் கெடுபிடி: பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
20 Aug 2025திருநெல்வேலி : திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாட்டுக்கு காவல்துறை கெடுபிடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
-
மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிப்பு: இருளில் மூழ்கியது ஊட்டி
20 Aug 2025ஊட்டி : மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகர் முழுவதும் இருளில் மூழ்கியது
-
சித்த மருத்துவர்களின் வாரிசுகளை மருத்துவர்களாக அறிவிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
20 Aug 2025மதுரை : சித்த மருத்துவர்களின் வாரிசுகளை மருத்துவர்களாக அறிவிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
ஒண்டிவீரன் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
20 Aug 2025சென்னை : ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
-
துணை கேப்டன் பதவியில் இருந்து படேல் நீக்கம்; விளக்கம் கோரும் முன்னாள் வீரர்
20 Aug 2025மும்பை, துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கத்திற்கு விளக்கம் வேண்டும்- முன்னாள் வீரர் காட்டமாக தெரிவித்தனர்.
-
மக்கள் குறைதீர் முகாமில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் : ராஜ்கோட்டை சேர்ந்தவர் கைது
20 Aug 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால்
-
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்
20 Aug 2025புதுடெல்லி : பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதாக்களை மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்.
-
பிரதமர் மோடி முன்னிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
20 Aug 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி முன்னிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு ஏன்..? அமெரிக்கா புது விளக்கம்
20 Aug 2025நியூயார்க் : உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
-
பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பரபரப்பு பேச்சு
20 Aug 2025புதுச்சேரி, பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளதாக நாராயணசாமி பேசினார்.
-
பட்டியல் சமூகத்துக்கான இடஒதுக்கீடு: கர்நாடக அமைச்சரவை முக்கிய முடிவு
20 Aug 2025பெங்களூரு : பட்டியல் சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
நயினார் தலைமையில் நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு: தமிழக பா.ஜ.க.
20 Aug 2025சென்னை : நயினார் தலைமையில் நாளை நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு நடப்பதாக தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா: பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
20 Aug 2025புதுடெல்லி : பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.