எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : போர்ச்சுகீஸ் குடியரசில் இந்திய குடிமக்களை பணியில் அமர்த்துவதற்கு இந்தியா மற்றும் போர்ச்சுக்கல் அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பணியாளர்களை அனுப்பவும், ஏற்றுக்கொள்ளவும் இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையே ஒத்துழைப்பு மற்றும் கூட்டணிக்கான நிறுவனம் சார்ந்த செயல்முறைக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
திட்டத்தின் அமலாக்கத்தை கண்காணிப்பதற்காக இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஓர் கூட்டு குழு அமைக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் ஐக்கிய ஐரோப்பிய உறுப்பு நாட்டில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள், குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்றினால் இந்தியாவிற்கு திரும்பி உள்ள ஏராளமான இந்திய தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான புதிய தலமாக போர்ச்சுகல் விளங்கும். திறன் வாய்ந்த இந்திய தொழிலாளர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்த ஒப்பந்தத்தின் இறுதியில், இந்திய தொழிலாளர்களை பணியில் அமர்ந்துவதற்கான முறையான ஏற்பாட்டை போர்ச்சுக்கல்லும் இந்தியாவும் மேற்கொள்ளும்.
போர்ச்சுகல் நாட்டில் பணிபுரியும் மேம்பட்ட வேலை வாய்ப்புகளை இந்திய தொழிலாளர்கள் பெறுவார்கள். இந்த ஒப்பந்தத்தில் முன்மொழியப்பட்டுள்ள அரசுகளுக்கு இடையேயான செயல்முறை, இரு தரப்பின் அதிகபட்ச ஆதரவுடன் பணியாளர்களின் இடமாற்றம் சுமூகமாக மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


