முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு தரப்பு பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்திய - ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 11 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி, இரு தரப்பு பாதுகாப்பு உறவுகள் குறித்து ஆஸ்திரேலியா-இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர்களிடையே நேற்று 2+2 பேச்சுவார்த்தை  நடைபெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள், குவாட் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இவற்றில், இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 2+2 பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய ராணுவ அமைச்சர், இந்திய ராணுவ அமைச்சருடனும், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இதற்காக, ஆஸ்திரேலிய ராணுவ அமைச்சர் பீட்டர் டட்டான், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மரிஸ் பய்னே ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தனர். 2+2 பேச்சுவார்த்தைக்கு முன்பாக, நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய ராணுவ அமைச்சர் பீட்டர் டட்டானுடன் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரிஸ் பய்னே இடையிலும் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை மேலும் ஸ்திரப்படுத்துவது குறித்து இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர். கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.

 

மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து