எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஆனைமடுவு நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து அணை கால்வாய் பாசனப் பகுதிகளிலும், ஆற்று பாசனப் பகுதிகளிலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும், ஆற்று பாசனப் பகுதிகளுக்கு இன்று 15.09.2021 முதல் 12 நாட்களுக்கு 62.16 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், 27.09.2021 அன்று முதல் வலதுபுறக் கால்வாய் பகுதி மற்றும் இடதுபுறக் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு 9 நாட்களுக்கு மொத்தம் 38.88 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், சிறப்பு நனைப்பாக தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் புழுதிக்குட்டை, குறிச்சி, சின்னம்மநாயக்கன்பாளையம், கோலாத்து கோம்பை, நீர்முள்ளிக் குட்டை மற்றும் சந்திரப்பிள்ளை வலசு கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


