எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை தொடர்பான 4-ம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கறுப்புக் கொடி காட்ட வந்க விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்கள் கார் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைக்கு தீர்வு காணும் விதமாக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மாவட்ட நிர்வாகத்துடன் நடத்திய 4-ம் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கார் மோதிய சம்பவத்தில் விவசாயிகள் நான்கு பேரும், பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எட்டு பேர் உயிரிழப்பைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தரப்பு, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்வது, அவரது மகனை கைது செய்வது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் அவர்களுக்கு அரசு வேலை வழங்குவது போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், லக்கிம்பூர் மாவட்டம் பதற்றத்துடன் காணப்படுகிறது. அங்கு பெருமளவில் காவல்துறையினரும், மத்திய துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


