முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மாலே : அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியை இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்தார். 

5 அணிகள் இடையிலான 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்தது. இதில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. 

இந்திய கேப்டன் சுனில் சேத்ரி 49-வது நிமிடத்தில் முதலாவது கோல் அடித்தார். மொத்தத்தில் இது அவரது 80-வது சர்வதேச கோலாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியை (80 கோல்) சமன் செய்தார். 

சேத்ரியை தொடர்ந்து சுரேஷ் வாங்ஜாம் (50-வது நிமிடம்), சஹால் சமாத் (90-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு அசத்தினர். 1993-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்திய அணி இந்த கோப்பையை வெல்வது இது 8-வது முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து