எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் பரவலாகப் பெய்து வரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 24.9.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆயத்தப்பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று அப்போது விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு 448 மி.மீ மழை இயல்பாகக் கிடைக்கப்பெறுகிறது. இது, தமிழ்நாட்டின் வருடாந்திர இயல்பான மழை அளவில் 47.32 விழுக்காடாகும். வடகிழக்குப் பருவமழை காலத்தில் புயல் மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாவதோடு, தொடர்புடைய சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை ஏற்படுகிறது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. 16.10.2021 அன்று குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சராசரி மழை அளவைவிட அதீத கனமழை மற்றும் மிக கனமழை பெய்துள்ளது.
இந்த கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 குடிசைகள் பகுதியாகவும், 3 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 2 நபர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 நபரும் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 நிவாரண மையங்களில் 116 குடும்பங்களைச் சேர்ந்த 337 நபர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், திருக்குருங்குடி மலையில் உள்ள நம்பி கோயிலுக்கு வழிபடச் சென்ற 500 பக்தர்கள், மலைப்பகுதியில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினைத் தொடர்ந்து, கோயிலிலிருந்து வர இயலாத நிலையில், வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உதவியுடன் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இந்த மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட அளவில், பருவமழை காலத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில், 17.10.2021 முதல் 20.10.2021 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மழை சேதங்கள் குறித்துத் தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற காணொலிக் காட்சி ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அடுத்துவரும் மழை காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து, அம்முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரவும், அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும் அறிவுரை வழங்கினார்.
முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள் / டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யவும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கவும்அறிவுறுத்தினார்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. தேவைப்படும் பொதுமக்கள் 1070 கட்டணமில்லாத் தொலைபேசி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
- கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்க வேண்டிய 33 கேள்விகள் மத்திய அரசு வெளியீடு
23 Jan 2026டெல்லி, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா..? செங்கோட்டையன் பதில்
23 Jan 2026சென்னை, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
-
மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு
23 Jan 2026செங்கல்பட்டு, மதுராந்தகம் வந்த பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
-
டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய இ.பி.எஸ்.
23 Jan 2026செங்கல்பட்டு, தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய எடப்பாடி பழனிசாமி கை குலுக்கிக் கொண்டனர்.
-
மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரேமேடையில் பங்கேற்ற தே.ஜ. கூட்டணி தலைவர்கள்
23 Jan 2026செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்ரு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரேமேடையில் பங்கேற்றனர்.
-
குஜராத் போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சி: பிரதமர் மோடி
23 Jan 2026திருவனந்தபுரம், குஜராத்தை போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
நானும், டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Jan 2026சென்னை, நானும் டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
மின் பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன - அமைச்சர்
23 Jan 2026சென்னை, மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது என சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
நாகாலாந்தில் நிலநடுக்கம்
23 Jan 2026நாகலாந்த், நாகாலாந்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
-
வடக்கில் சரிசெய்துவிட்டு பிரதமர் தெற்கே வரட்டும்: காங்கிரஸ் கட்சி விமர்சனம்
23 Jan 2026திருவனந்தபுரம், வட மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு, தென் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வெண்ணுடன் கூடிய பெயா் பட்டியல் வெளியீடு
23 Jan 2026சென்னை, தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மாணிக்கராஜா விளக்கம்
23 Jan 2026சென்னை, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது குறித்து மாணிக்கராஜா விளக்கம் அளித்துள்ளார்.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jan 2026சென்னை, சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
23 Jan 2026சென்னை, ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பதிவு
23 Jan 2026புதுடெல்லி, தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது என்றும் தி.மு.க அரசுக்கு விடை கொடுக்க தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
ஜனநாயகன் பட வழக்கில் வருகிற 27-ம் தேதி தீர்ப்பு
23 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
-
இன்று ம.நீ.ம.செயற்குழு கூட்டம்
23 Jan 2026சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
23 Jan 2026சென்னை, தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.
-
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
23 Jan 2026சென்னை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட
-
இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
23 Jan 2026புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.
-
திருவனந்தபுரம் - தாம்பரம் உள்பட 3 அம்ருத் பாரத் ரயில்களை துவக்கி வைத்தார் பிரதமர்
23 Jan 2026திருவனந்தபுரம், திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிம
-
திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமையுமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
23 Jan 2026சென்னை, திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
-
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ வளாகத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
23 Jan 2026சென்னை, ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இன்றைய ராசிபலன்
23 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Jan 2026- மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி
- திருச்சேறை சாரநாதர் விழா தொடக்கம்
- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு
- திருமொச்சியூர், திருவாவடுதுறை, திருவானைக


