முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜனதா மீது கைவைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் : அண்ணாமலை எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை : பா.ஜனதா மீது கைவைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் என்று பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக மின்சார வாரியம் இயங்கவில்லை. அமைச்சருக்கு கமிஷன் கொடுப்பதற்காக மட்டுமே மின்சார வாரியம் இயங்கி வருகிறது. மின்சாரம் வருவதில்லை என அணில் மீது பழிபோட்டனர். தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் போடுவதற்காக மின்சார வாரியத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தடுப்பூசித் தட்டுப்பாடு என்று கூறிவந்தனர். இப்போது தமிழக அரசு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசியைக் கையிருப்பாக வைத்திருக்கின்றனர். 

ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்காக, நேர்மையாக வேலை செய்பவர்களை ஊழல்வாதியாக மாற்றுகின்றனர். மாற்று அரசியல் என்று சொன்னார்கள் என்றால், இந்த அரசு முதலில் ஊழலை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு அமைச்சரின் ஊழலையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். பா.ஜனதா 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம்.

அவர்களுக்கு மோடி யாரென்று தெரியவில்லை. பா.ஜ.க. பற்றித் தெரியவில்லை. இந்த அமைச்சர்கள் எல்லாம் ஒரு தொகுதிக்குள் இருந்து அரசியல் செய்பவர்கள். நாங்கள் தேசியவாதிகள். இந்தியாவில் சிறுபான்மையினருக்குக் கொடுக்கப்படும் உரிமைகள், பிற நாடுகளில் கொடுக்கப்படுவதில்லை. கை வைக்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.

கை வைப்பதற்காகக் காத்திருக்கிறோம். வைத்து பார்த்தால்தானே பா.ஜ.க. என்னவென்று தெரியும். சமூக வலைதளங்களில் பா.ஜ.க. பெண் நிர்வாகியை ஆபாசமாகப் பேசுகின்றனர் என்று ஆதாரத்துடன் புகார் அளித்தோம். நேர்மையான காவல்துறையாக இருந்தால் அனைவரின் மீதும் சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க. மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து