எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு ஆகியோர் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த தொடர் கன மழையினால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு, அமைச்சர் எ.வ.வேலு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவுடன் கொளத்தூர் தொகுதியில் அனைத்து வார்டுகளுக்கும் நேற்று நேரடியாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். தமிழக முதல்வர் பல்வேறு அரசு பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அமைச்சர்கள் திரு.எ.வ.வேலுவையும், பி.கே.சேகர்பாபுவையும் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிட உத்திரவிட்டார்.
கொளத்தூர் தொகுதியில் பெரும்பாலான இடங்கள் தாழ்வான பகுதியாக உள்ளதால், கனமழை வரும் பொழுது அதிகபடியான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும், அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி மழைநீர் எல்லாப் பகுதிகளிலும் இரண்டே நாளில் வெளியேற்றப்பட்டு விட்டது.
முதலில் வார்டு எண்.69-க்கு சென்ற அமைச்சர்கள், பொது மக்களுக்கு வழங்குவதற்காக துணிப் பைகளில் அடைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டனர். ஒவ்வொரு பையிலும் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து திருப்தி அடைந்த பிறகே பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியை மேற்கொண்டனர். அரிசி, போர்வை உட்பட 12 பொருட்கள் துணி பைகளில் அடைக்கப்பட்டிருந்தன.
வார்டு எண்.69-ல் ஞானம்மாள் தோட்டம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அவர்கள் வழங்கினார்கள். வார்டு எண்.68-ல் உள்ள திரு.வி.க. நகர் பகுதியில் மழைநீரால் சேதமடைந்த அனைத்து தெருக்களையும் சாலைகளையும் பார்வையிட்டு நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்தனர். சிறு சிறு பாதிப்புகளை உடனடியாக சீரமைக்கும்படி ஆணையிட்டனர். அதன் பிறகு, சுமார் 5000 பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர்.
வார்டு எண்.67-ல் உள்ள ராமர் கோயில் பகுதி மூர்த்தி தெரு, ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கும் சென்று சேதமடைந்த தெருக்களையும், தண்ணீர் தேங்கி, மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்த பின்னர், பொது மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தனர். வார்டு எண்.65 மற்றும் 64-ல் உள்ள ராஜாஜி நகர் டாக்டர் அம்பேத்கார் நகர் வினோபா நகர், கங்கா திரையரங்கம் ஆகிய பகுதிகளில் மழை நீரால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக சீரமைக்க அவர்கள் உத்தரவிட்டனர். கொளத்தூர் தொகுதி முழுவதும், நேரில் ஆய்வு செய்து பொது மக்களிடம், கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கேட்டறிந்தனர். இப்பகுதியிலுள்ள சுமார் 5000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை அவர்கள் வழங்கினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லக்கில் நாட் கதிரறுப்பு விழா.
- நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருசாபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
30 Jan 2026


