எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னையில் பெய்த மழை காரணமாக 63 பகுதிகளில் உள்ள 151 தெருக்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த தெருக்களில் 47 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. மேலும், இன்று வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னை முழுவதும் மீண்டும் தண்ணீரில் மிதக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கியது. எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலுமே கனமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை பெய்து வரும் வேளையில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பொழிவு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி பெருமழையை கொடுத்துள்ளன. சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே மழை பெய்ய தொடங்கியது. தீபாவளியையொட்டியும் கனமழை பெய்து வெள்ளம் தேங்கியது.
இந்த நிலையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மாநகரில் மிக கன மழை பெய்தது. 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக சென்னையில் பெய்த மழையால் மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. இந்த நிலையில் கடந்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2-வதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அப்போது சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு பெரிய அளவில் மழை பொழிவு கொடுக்காமல் கருணை காட்டி விட்டு ஆந்திரா நோக்கி சென்றது. இருப்பினும் அப்போது புதுவை மாநிலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக மழை பெய்தது.
இந்த நிலையில் 3-வதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாகவும் அதுவும் சென்னைக்கு மிக கனமழை கொடுக்கும் எனவும் சென்னை வானிலை மையம் கடந்த வாரம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வானிலை மையம் அறிவிப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பில்லை என தெரிவித்தது. ஆனால் காற்றழுத்தம் காரணமாக சென்னையில் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்து இருந்தது.
இதன்படி சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இருந்தே மழை பெய்தது. பிற்பகலுக்கு பிறகு கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்தது. இடி-மின்னலுடன் 10 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று காலையிலும் மழை நீடித்தது. இதன் காரணமாக சென்னையில் வெள்ளம் வடிந்து இருந்த பகுதிகளில் மழை நீர் மீண்டும் தேங்கி உள்ளது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரம் மீண்டும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் 300 தெருக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தி.நகர், கே.கே.நகர், மாம்பலம், மேற்கு மாம்பலம், கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம், புளியந்தோப்பு, எழும்பூர், வேளச்சேரி, மேடவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வேப்பேரி உள்ளிட்ட மாநகரின் அனைத்து இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் அதிகளவில் தேங்கி உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை கமிஷனர் அலுவலகம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளது.
புளியந்தோப்பு, ஓட்டேரி, மாதவரம் வடபெரும்பாக்கம், விளங்காடுபாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் அதிகளவில் வீடுகளை சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து பெய்த மழையால் சென்னை மக்கள் மீண்டும் கடுமையான அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. இதில் தாழ்வான இடங்களில் உள்ள 300 தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர். கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது.
சென்னையில் பெய்த மழை காரணமாக 63 பகுதிகளில் உள்ள 151 தெருக்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த தெருக்களில் 47 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதற்கிடையே அதி கனமழை இன்று வரை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மழை நீடித்தால் சென்னையில் வெள்ளம் தேங்கி உள்ள இடங்களில் தண்ணீர் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
டான் பிராட்மேன் போல... கில்லுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
08 Jul 2025மும்பை : 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி
08 Jul 2025வாஷிங்டன் : டெக்சாஸ் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்
08 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் ஆயுதங்களை வழங்கவுள்ளோம்
-
சி.எஸ்.கே. 3-வது இடத்துக்கு சரிந்தது: ஐ.பி.எல். பிராண்ட் மதிப்பில் ஆர்.சி.பி. அணிக்கு முதலிடம்
08 Jul 2025மும்பை : ஆர்.சி.பி. அணியின் பிராண்ட் மதிப்பு 227 மில்லியனாக இருந்து 269 மில்லியனாக அதிகரித்துள்ளது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இறக்குமதி வரிக்கான கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
08 Jul 2025வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
08 Jul 2025சென்னை : ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
-
கடலூர், செம்மங்குப்பம் அருகே பயங்கரம்: பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் 3 பேர் பலி
08 Jul 2025கடலூர், கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரயில்வே கேட் ஒன்று இருந்தது.
-
போலீஸ் காவலில் மரணம் அஜித்குமார் வழக்கு: ஆகஸ்ட் 20-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சி.பி.ஐ.க்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jul 2025மதுரை, போலீஸ் காவலில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ரயில்வே கேட் திறந்து தான் இருந்தது: படுகாயமடைந்த மாணவர் அதிர்ச்சி தகவல்
08 Jul 2025கடலூர் : ரயில்வே கேட் திறந்து தான் இருந்தது என படுகாயமடைந்த மாணவர் தெரிவித்துள்ளார்.