முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று (நவ.30) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (30-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலங்களை மூழ்கியபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் பெய்த பெருமழையால் மாநகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கியது. குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மிதமானது முதல் கனமழை நீடித்து வருகிறது. டிசம்பர் 1ம் தேதி அன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் இருக்கும். 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதனால், குமரி கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், அதே போன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. 

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். வானிலை ஆய்வு மைய கணிப்புப்படி, இது மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நகர்ந்தால் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி நகரும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நெருங்க வாய்ப்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே கனமழை இருக்கும் என்றும், அதன் பின்பு படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து