முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? ராகுல் காந்தி கேள்வி

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

மக்கள் பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில், நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, கடந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாகக் கூறி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.,க்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டார். இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் 6 பேர் காங்கிரஸ் எம்.பி.க்கள். தலா 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தலா ஒருவர், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள். 

அவர்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் அறிவித்தார். அத்துடன், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதனையடுத்து 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 12 எம்.பி.,க்கள் மன்னிப்பு கோரினால், அவர்கள் மீதான தடை குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார். 

 

இந்நிலையில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மக்கள் பிரச்சனையை பாராளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா..? மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று ராகுல் காந்தி இந்தியில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து