முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம்

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2022 பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது.

21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரை செய்யும் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், இடஒதுக்கீடு பணிகளையும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், அதற்கான அறிவிப்பை ஜனவரி மாதம் 3-ம் வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளையும், நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை இறுதி செய்யும் பணிகளையும் அரசு முடிக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மழை, வெள்ள நிவாரண தொகை, பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட பணிகளையும் ஜனவரிக்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3-வது வாரத்தில் வெளியிடவும் முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து