முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 150.89 கோடியில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சர்க்கரை ஆலைகளுக்கு அரவைப் பருவத்திற்கு கரும்பு வழங்கிய பதிவு பெற்ற விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும்  சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ. 150.89 கோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.  

மத்திய அரசு ஆண்டுதோறும் கரும்புக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையை  நிர்ணயம் செய்து வருகிறது.  கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு. ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் விலைக்கு மேல்  கூடுதலாக தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி நிதி நிலை அறிக்கை 2021-2022 அறிவிப்பின் படி, கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.42.50/-, சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ. 150/-, என மொத்தம் ரூ. 192.50/- தமிழக அரசால், மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ. 2,707.50-யை விட டன் ஒன்றிற்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்படி 2020-21ஆம் அரவைப்பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய பதிவு பெற்ற விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ரூ. 2,900/- கிடைக்கப்பெறுகிறது. 

அதன்படி, தமிழ்நாடு அரசால், 2020-2021 அரவைப்பருவத்தில் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், 15 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் 17 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு  78 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு வழங்கிய தகுதியுடைய 91 ஆயிரத்து  120 விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும்  சிறப்பு ஊக்கத் தொகையாக, மொத்தம் ரூபாய் 150 கோடியே 89 லட்சம் வழங்கும் பணியினை  முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் 5  கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் / சர்க்கரைத் துறை ஆணையர் ஹர்மந்தர் சிங், வேளாண்மை உற்பத்தி  ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து