எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சசிக்குமார், மடோனா அருள்தாஸ், சங்கிலி முருகன், ஶ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் கொம்பு வச்ச சிங்கம்டா .பெரியார் வலியுறுத்திய சாதி மதங்களைக் கடந்த தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் ஜாதி வெறி அரசியல் நடத்துபவர்கள் கொட்டம் அடங்கும், சமூகத்தில் அமைதி நிலவும் என்ற கருத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். கதை ; கரூர் பேரூராட்சியில் மக்கள் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார் மகேந்திரன். இவருடைய ஒரே மகன் சசிகுமார். இவருக்கு ஐந்து நண்பர்கள். சிறுவயதிலிருந்தே சாதி, மத வேறுபாடின்றி பழகி வருகிறார்கள். சசிகுமார் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். அதே நேரத்தில் அங்கு உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. பிறகு அது ஜாதி பிரச்சினையாக மாறிவிடுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக் கதை. கதாநாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் வழக்கமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார். கதாநாயகி மடோனா அவ்வப்போது வந்து போகிறார். சூரி தனது சேட்டைகளால் கலகலப்பூட்டுகிறார். இயக்குநர் மகேந்திரனுக்கு அழுத்தமான கதாபாத்திரம். ஜாதி அரசியல் எந்தளவிற்கு சமூகத்தில் ஊடுருவியுள்ளது என்பதை படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் வெளிப்படுத்தியுள்ளார். கதையின் நோக்கம் உயர்ந்ததுதான். ஆனால் இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


