முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அள்ளி, அள்ளி கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். : டுவிட்டரில் எடப்பாடி புகழாரம்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : எம்.ஜி.ஆரின்  105-வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், கடைநிலை தொழிலாளியையும் மதிக்கும் பண்பாளர், சரித்திர திட்டங்களால் தமிழகத்தின் தாயுமானவராய் வாழ்ந்து, கோடிக் கணக்கான இதயங்களில் அழியாப் புகழுடன் இதயதெய்வமாக வீற்றிருக்கும் எங்கள் புரட்சித்தலைவருக்கு 105-வது பிறந்தநாள் புகழ் வணக்கங்கள் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து