தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் தமிழ் திரைப்படங்கள் தவிர இந்தி திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென்று அறிவித்தார். அந்த அறிவிப்பை அவர் டுவிட்டரில் வெளியிட்டார்.
நடிகர் தனுஷ் - ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியானதில்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் திடீரென பிரிவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்குவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது பிரிவுக்கு இது காரணம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
தனுஷ் சமீபகாலமாக இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த “அட்ராங்கி ரே” இந்தி படம் வெளியானது. இந்த படம் தமிழில் “கலாட்டா கல்யாணம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இன்னும் இந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்தி பட உலகில் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் உள்ளது. இந்தி படங்களில் நடிப்பது தொடர்பாக அவர் ஐஸ்வர்யாவுடன் எதுவும் கலந்து ஆலோசிப்பது இல்லை. தன்னிச்சையாகவே முடிவு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது.
இந்தி படங்களில் நடித்த பிறகு அவர் குடும்பத்தின் மீது நெருக்கம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் மீது சமீபகாலமாக ஐஸ்வர்யா கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் நடித்த படங்களில் கதாநாயகிகளுடன் அவர் நெருங்கி பழகியதை ஐஸ்வர்யா விரும்பவில்லை என்றும் அதனால் தான் இந்த பிரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
“மில்க்” நடிகை ஒருவருடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததாக சினிமா துறையில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அந்த நடிகையின் வீட்டிலேயே அவர் எப்போதும் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்ததும் அவர் தனுசை கண்டித்ததாக தெரிகிறது. ஆனாலும் தனுஷ் அதை கேட்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. மேலும் தெலுங்கு நடிகை ஒருவரிடமும் தனுஷ் நெருக்கம் காட்டி வந்தார். அதனாலும் அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேரள நடிகை ஒருவர் நடித்துள்ளார். அவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசு பரவியது. இந்த நிலையில் அந்த நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து தனுஷ் தனக்கு தொல்லை கொடுப்பதாக புகார் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தனுஷ்- ஐஸ்வர்யா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. அவர்கள் நிரந்தரமாக பிரிவதற்கு இதுவே காரணம் என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சமீபத்தில் சமந்தா- நாகசைதன்யா இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கொத்தமல்லி சாதம்
1 day 18 hours ago |
எலுமிச்சை சாதம்
2 weeks 2 days ago |
கொத்தமல்லி சிக்கன்
1 month 1 week ago |
சிக்கன் மசாலா
2 months 1 day ago |
மதுரை மட்டன் கறி தோசை.
2 months 3 weeks ago |
சிக்கன் போன்லெஸ் 65.
2 months 4 weeks ago |
-
கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யப் படையினர் தீவிரம்
28 May 2022கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஐடியா
28 May 2022டெக்சாஸ் தொடக்க பள்ளி படுகொலை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 28-05-2022.
28 May 2022 -
தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும்: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
28 May 2022தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்
-
விஷமக்காரன் விமர்சனம்
28 May 2022ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் வி என்கிற விஜய் குப்புசாமி.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசை
28 May 2022ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலக புகழ் பெற்ற ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் சில நாட்களுக்கு அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
28 May 2022அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார் தொழிற்சாலை அமைக்கப்படுமா? எலான் மாஸ்க் பதில்
28 May 2022டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மாஸ்க் தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை எதிர்கொள்ள தமிழக அரசின் வழக்கறிஞர்கள் குழு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு
28 May 2022முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்கு
-
குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
28 May 2022குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் 4 பேருக்கும் ஒரே நாளில் வரும் பிறந்ததினம்
28 May 2022திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வந்தனர். இதன்பின்பு நடந்தது தான் வினோதம்.
-
பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
28 May 2022சென்னை : பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும்: ரணில் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
28 May 2022இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
பயணிகளை தடுத்த விவகாரம்: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் - டி.ஜி.சி.ஏ
28 May 2022மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.
-
கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது: குஜராத்தில் பிரதமர் மோடி உரை
28 May 2022கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பா.ஜ.க அரசு செயல்பட்டு வருவதாக குஜராத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
28 May 2022தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சூடானில் பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு வினோத தண்டனை
28 May 2022பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு கோர்ட்டால் வினோத தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தெற்கு சூடானில் அரங்கேறியுள்ளது.
-
வருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரிய நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
28 May 2022வருமான வரி வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
மனைவி, குழந்தைகளை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலையா? - காவல் ஆணையர் ரவி விளக்கம்
28 May 2022சென்னை : சென்னை பொழிச்சலூரில் ஐ.டி.
-
கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடியவரை சுட்டுக் கொன்ற போலீசார்
28 May 2022கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுற்றி வளைத்த போலீசார் அவரை சுட்டுவீழ்த்தினர்.
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 4- வது இடம் பிடித்தது இலங்கை
28 May 2022வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிராவில் முடிந்தது.
-
நீட் தேர்வு விவகாரம்: அண்ணாமலை கருத்து
28 May 2022நீட் தேர்வு தொடர்பான தி.மு.க.வின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி: மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும் : சிலை திறப்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
28 May 2022சென்னை : மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
-
சென்னையில் உர இருப்பு குறித்த ஆய்வு கூட்டம் : உழவர் நலத்துறை செயலாளர் தலைமையில் நடந்தது
28 May 2022சென்னை : சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குநரக அலுவலகத்தில் உர இருப்பு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் உழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி தலைமைய
-
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் விபத்துக்கு காரணமான மின்சார ரயில் டிரைவர் பணியிடை நீக்கம்..!
28 May 2022சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடந்த விபத்துக்கு காரணமான மின்சார ரெயில் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.