முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணை அடிப்படையில் வாரிசுதாரர்கள் 21 பேருக்கு பணி நியமன ஆணைகள் : அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆதி திராவிட நலத்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

 இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

அரசுப் பணியில் இருக்கும்போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு உதவுவதற்காக அரசால் கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி காத்திருப்போர் பட்டியலிலிருந்து முதுநிலை மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் 2019-2020 மற்றும்   2020-2021 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீட்டின் படி 14 இளநிலை உதவியாளர் மற்றும் 7 தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதியானவர்களுக்கு நேற்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரால் பணியிடம்  வழங்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து