முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அதிக பாதிப்பு கண்டுபிடிப்பு: குழந்தைகளை பாதிக்கும் கொரோனா 3-வது அலை: பெற்றோர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனா 3-வது அலையில் தலைநகர் டெல்லியில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெற்றோர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 3-வது அலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் சூழலில், டெல்லியில் அது குழந்தைகளை அதிகமாக பாதித்துள்ளது. அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குழந்தைகளிடம் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்கும்படி பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல், குளிர் , வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் கூடிய குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதற்கிடையே ஜனவரி 9 முதல் 12 ஆம் தேதி வரை 7 குழந்தைகள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து