எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நதி நீர் இணைப்பு, புதிய வேலைவாய்ப்புகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள மத்திய பட்ஜெட் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் என அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அம்மாவின் அரசில், பாரதப் பிரதமரை நான் நேரில் சந்திக்கும் போதும், கடிதங்களின் வாயிலாகவும் அம்மா அரசின் கனவுத் திட்டமான கோதாவரி, காவேரி இணைப்பினை நிறைவேற்றிட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தேன். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு அ.தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், கங்கை-கோதாவரி-கிருஷ்ணா–காவேரி–பெண்ணையாறு நதிகள் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தொற்றுமை கிடைத்தவுடன் இத்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சுமார் 44,000 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல முக்கிய அம்சங்களும் உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 விழுக்காடு எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் தருவதற்காக, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனை தமிழக அரசு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளிடம் இருந்து 1000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும்.
நடப்பு நிதி ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாகக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3.80 லட்சம் கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு மற்றும் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
கொரோனா நோய்ப் பெருந்தொற்று போன்ற நோய்களின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, நாடு முழுவதும் தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு, மத்திய அரசு ஊழியர்களைப் போலவே, மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சலுகை, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
ராணுவத் தளவாட உற்பத்தியில் 68 சதவீத தயாரிப்புகள் உள்நாட்டிலேயே தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருக்கும் போதே, தமிழ் நாட்டில் ராணுவத் தளவாட உற்பத்தித் தொழில்களைத் தொடங்குவதற்கு சேலம், திருச்சி, ஓசூர் போன்ற ஒரு சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1 முதல் 12-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், 200 கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நடப்பாண்டில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்றும், அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சம் அஞ்சலகங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாடு முழுவதும் உள்ள தபால் துறை ஊழியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், மேலும் 2000 கிலோ மீட்டர் தொலைவிற்கு உலகத் தரத்திற்கு ஈடாக சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், துரித சாலைப் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும்.
எனினும், தொடர்ந்து 9 ஆண்டுகளாக வருமான வரி உச்சவரம்பு எந்தவித மாற்றமுமின்றி தொடர்வது, மாத வருமானம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே, வருமான வரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், குடைக்கு வரியை உயர்த்தி விட்டு, வைரத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, குடைக்கான வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும்.
மொத்தத்தில், மத்திய அரசின் 2022-23ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத் துறைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்றும் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் பிரதமர் மற்றும் சிறப்பான முறையில் பட்ஜெட்டை வழங்கிய நிதி அமைச்சர் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
06 Jan 2026தஞ்சாவூர், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு இன்று உள்ளூர் விடுகுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
06 Jan 2026சென்னை, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறது தமிழ்நாடு அரசு: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
06 Jan 2026சென்னை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் பயணம்
06 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
தமிழகத்தில் வருகிற 9, 10-ம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் வருகிற 9. 10- மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
06 Jan 2026சென்னை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை நேற்று (ஜன. 6) ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
தேசிய சராசரியை தாண்டி தமிழ்நாடு புதிய சாதனை: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கையில் தகவல்
06 Jan 2026சென்னை, சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் வினியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியை தமிழ்நாடு விஞ்சியுள்ளதாக மாநில திட்டக் கு
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
06 Jan 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 12-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) சம்மன் அ
-
மாநில கல்விக்கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: வருகிற 25-ம் தேதிக்குள் மக்கள் கருத்துகளை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
06 Jan 2026சென்னை, மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்களுக்கு 25-ம் தேதி கருத்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை தீர்ப்பு
06 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்றும் அரசின் மேல் முறையீட்டு மனுவை
-
சோனியா மருத்துவமனையில் அனுமதி
06 Jan 2026புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் நடைமுறை வரும் 12-ம் தேதி முதல் அமல்
06 Jan 2026சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு: இந்தோனேசியாவில் 9 பேர் பலி
06 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முகமது சமி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன்
06 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
'உங்கள் கனவை சொல்லுங்க' திட்டம்: வரும் 8-ம் சென்னையில் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கனவை கேட்கும் திட்டம்தான் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் என தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில்மகேஷ், இந்த திட்டத்தை வருகிற 9-ம் தேதி முதல
-
அதிபர் ட்ரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விரும்பும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
06 Jan 2026காரகஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06 Jan 2026டோக்கியோ, ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி ஏற்படும் அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி பெயர்கள் நீக்கம்
06 Jan 2026லக்னோ, தமிழகத்தை போன்றே உத்தரபிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது.
-
வெனிசுலாவில் தேர்தல் கிடையாது: ட்ரம்ப்
06 Jan 2026வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவ
-
4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்..!
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெரம்பலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
-
ஜன நாயகன் திரைப்படம் வெளியாகுமா? விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்
06 Jan 2026சென்னை, நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள
-
தொடர்ந்து சாதனைகளை படையுங்கள்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
06 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


