தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நதி நீர் இணைப்பு, புதிய வேலைவாய்ப்புகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள மத்திய பட்ஜெட் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் என அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அம்மாவின் அரசில், பாரதப் பிரதமரை நான் நேரில் சந்திக்கும் போதும், கடிதங்களின் வாயிலாகவும் அம்மா அரசின் கனவுத் திட்டமான கோதாவரி, காவேரி இணைப்பினை நிறைவேற்றிட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தேன். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு அ.தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், கங்கை-கோதாவரி-கிருஷ்ணா–காவேரி–பெண்ணையாறு நதிகள் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தொற்றுமை கிடைத்தவுடன் இத்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சுமார் 44,000 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல முக்கிய அம்சங்களும் உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 விழுக்காடு எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் தருவதற்காக, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனை தமிழக அரசு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளிடம் இருந்து 1000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும்.
நடப்பு நிதி ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாகக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3.80 லட்சம் கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு மற்றும் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
கொரோனா நோய்ப் பெருந்தொற்று போன்ற நோய்களின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, நாடு முழுவதும் தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு, மத்திய அரசு ஊழியர்களைப் போலவே, மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சலுகை, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
ராணுவத் தளவாட உற்பத்தியில் 68 சதவீத தயாரிப்புகள் உள்நாட்டிலேயே தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருக்கும் போதே, தமிழ் நாட்டில் ராணுவத் தளவாட உற்பத்தித் தொழில்களைத் தொடங்குவதற்கு சேலம், திருச்சி, ஓசூர் போன்ற ஒரு சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1 முதல் 12-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், 200 கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நடப்பாண்டில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்றும், அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சம் அஞ்சலகங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாடு முழுவதும் உள்ள தபால் துறை ஊழியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், மேலும் 2000 கிலோ மீட்டர் தொலைவிற்கு உலகத் தரத்திற்கு ஈடாக சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், துரித சாலைப் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும்.
எனினும், தொடர்ந்து 9 ஆண்டுகளாக வருமான வரி உச்சவரம்பு எந்தவித மாற்றமுமின்றி தொடர்வது, மாத வருமானம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே, வருமான வரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், குடைக்கு வரியை உயர்த்தி விட்டு, வைரத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, குடைக்கான வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும்.
மொத்தத்தில், மத்திய அரசின் 2022-23ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத் துறைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்றும் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் பிரதமர் மற்றும் சிறப்பான முறையில் பட்ஜெட்டை வழங்கிய நிதி அமைச்சர் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கேரட் லட்டு![]() 6 hours 45 sec ago |
KFC Style பிரைடு சிக்கன்![]() 4 days 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 06-07-2022.
06 Jul 2022 -
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
சதமடித்த ரூட், பேர்ஸ்டோ அபாரம்: 5-வது டெஸ்டை வென்று சாதனையுடன் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்துள்ளது.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
கடந்த 18 மாதங்களில் மட்டும் 11 சதங்கள் விளாசிய ஜோ ரூட்
05 Jul 2022பார்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பிரபல பேட்டர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியுள்ளார்.
-
மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் திரிபுரா முதல்வர்
05 Jul 2022புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியை திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ராஜினாமா செய்தார்.
-
இலங்கை மக்களுக்கு உதவ தமிழக போலீசார் ரூ. 1.40 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஸ்டாலினிடம் டி.ஜி.பி. வழங்கினார்
06 Jul 2022சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
-
அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
06 Jul 2022சென்னை : தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
06 Jul 2022காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.
-
சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா
06 Jul 2022சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
-
அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளக்கூடாது: பாக். ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி அதிரடி உத்தரவு
06 Jul 2022இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
05 Jul 2022புதுடெல்லி : டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது கூட்டம் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் 3- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்: சென்னையில் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை
06 Jul 2022சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்
-
உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் இருந்து வெளியேற மக்களுக்கு உத்தரவு
06 Jul 2022கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர்
-
தொடர் மழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
06 Jul 2022கம்பம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம்: மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது
06 Jul 2022சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
-
ரூ. 489 கோடி செலவில் வர்ணம் பூசப்படும் பிரான்சின் ஈபிள் கோபுரம்
06 Jul 2022பாரீஸ் : ரூ. 489 கோடி செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் நியமனம் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
06 Jul 2022லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
-
3-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
06 Jul 2022சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்ற
-
கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை
06 Jul 2022சென்னை : சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஐ.நா. அமைதி படையின் புதிய கமாண்டர் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jul 2022சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,