முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசிய கலசம் திருட்டு : போலீசார் தீவிர விசாரணை

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

கடலூர் : கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த மாதம் 6-ம் தேதி விமர்சையாக கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் கோவில் சன்னதியில் உள்ள விருத்தாம்பிகை அம்மன் கோபுரத்தில் இருந்த தங்க முலாம் பூசிய கலசம் ஒன்று மர்ம நபர்களால் கடந்த ஞாயிறன்று இரவு திருடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வந்த தகவலின்படி விருத்தாசலம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து