முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகைக்கடன் தள்ளுபடியில் தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்த தினகரன் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைபாடு என்ன என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து தி.மு.க. அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற கவர்ச்சியாக அறிவித்த தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதனைச் செயல்படுத்தாமல் புதுப்புது நிபந்தனைகளைப் போட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. 

எனவே, நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், தள்ளுபடி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போருக்கு நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும் என நோட்டீஸ் அனுப்புவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று தினகரன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து