தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் 3 மாதமாவது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்தும் முடக்கப்பட்டது. வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் “என்னடா இது நோய்” என்று புலம்பினார்கள். இதன் பிறகு கொரோனா பரவல் வேகம் எடுத்தது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. நாடு முழுவதும் மக்கள் அனைவரும் வீட்டின் மொட்டை மாடியில் விளக்கு ஏற்ற வேண்டும், வீடுகளின் முன்பு நின்று கொண்டு மேளம் அடித்து ஒலியை எழுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் கொரோனா இதற்கெல்லாம் அஞ்சவில்லை. முதல் அலை, இரண்டாம் அலை, 3-ம் அலை என ஆண்டுதோறும் திரும்ப... திரும்ப வந்து மக்களை பாடாய்படுத்தியது. இப்படி கடந்த 2 ஆண்டுகளாக மக்களை வாட்டி எடுத்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. கொரோனா பரவல் குறைய குறைய மாநில அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதன்படி கொரோனா பரவல் குறைவதை கணக்கில் கொண்டு மாநில அளவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இப்படி படிப்படியாக நீக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் கொரோனா பயம் நீங்கி மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ளலாம் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தொற்று நோய் மேலாண்மையில் நோய் பரவலை கண்டறிதல், தடுப்பூசி போடுதல், உரிய சிகிச்சை அளித்தல் என மருத்துவ மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன.
பொதுமக்கள் மத்தியிலும் கொரோனா குறித்து முழு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா கட்டுப்பாடுகள் இனியும் வேண்டாம் என்கிற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. கொரோனா பரவல் விகிதமும் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மாநில அரசுகள் விலக்கி கொள்ளலாம். புதிதாக எந்த கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு இனி விதிக்காது என்றும் மத்திய அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. தற்போது எந்த மாநிலத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் பெரிய அளவில் நடைமுறையில் இல்லை. தமிழகத்திலும் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இன்று முதல் சிறிய அளவில் உள்ள கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அரசின் நீச்சல் குளங்கள் திறக்கப்படாமலேயே இருந்தன. நீச்சல் குளத்தை திறந்தால் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டு குளிப்பார்கள். இதனால் நோய் பரவுமோ என்கிற அச்சமும் இருந்து வந்தது. ஆனால் கொரோனா பரவல் விலகி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட காரணத்தால் இன்று முதல் நீச்சல் குளங்கள் அனைத்தும் திறக்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் 3 மாதமாவது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகள் எங்கும் கடைபிடிக்கப்படுவது இல்லை. முகக்கவசம் அணியும் பழக்கத்தை பெரும்பாலான மக்கள் கைவிட்டு விட்டனர். சமூக இடைவெளியும் எங்கும் பின்பற்றப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 12 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி
05 Jul 2022கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது
05 Jul 2022சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்
05 Jul 2022ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு