எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் புதிதாக 3,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 26-ம் தேதி பாதிப்பு 2,483 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்களாக பாதிப்பு உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் அதிகபட்சமாக டெல்லியில் 1,607 பேருக்கு தொற்று உறுதியானது. அரியானாவில் 624, கேரளாவில் 412, உத்தரபிரதேசத்தில் 293, மகராஷ்டிராவில் 148, கர்நாடகாவில் 133 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நேற்று முன்தினம் மகராஷ்டிராவில் 2 பேர், டெல்லியில் 2 பேர், உத்தரபிரதேசத்தில் ஒருவர் என மேலும் 50 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,23,803 ஆக உயர்ந்துள்ளது. தொற்றின் பிடியில் இருந்து மேலும் 2,755 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 33 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,684 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 188 கோடியே 89 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் 4,96,640 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.74 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


