எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் 25 வயதான ஹெட்மயர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 11 ஆட்டங்களில் 291 ரன்கள் (சராசரி 72.75) சேர்த்துள்ள அவர் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இதில் 7 ஆட்டங்களில் நாட்-அவுட்டாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவி நிவானிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஹெட்மயர் நேற்று காலை தாயகம் புறப்பட்டு சென்றார். இது அவருக்கு முதல் குழந்தையாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ள அவர் விரைவில் அணியுடன் இணைவதை எதிர்நோக்கி உள்ளதாக ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்றாலும் சில ஆட்டங்களை அவர் தவற விடுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.
_____________
டோனி பேட்டை கடிக்க காரணம்: விளக்கம் கொடுத்த அமித் மிஸ்ரா
டோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டோனி களமிறங்குவதற்கு முன்பு பெவிலியனில் காத்திருந்தபோது தனது பேட்டை பல்லால் கடித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகின. டோனி ஏன் பேட்டை கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அமித் மிஸ்ரா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''டோனி ஏன் அடிக்கடி தனது பேட்டை கடிக்கிறார்'என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள். அவர் தனது பேட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக, பேட்டில் உள்ள டேப்பை கடித்து அகற்றுகிறார். டோனியின் பேட்டில் டேப் அல்லது நூல் இருப்பதை நீங்கள் எப்போதுமே பார்த்திருக்க மாட்டீர்கள்'' என்று அவர் பதிவிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் எந்தவொரு அணியும் அமித் மிஸ்ராவை வாங்கவில்லை. அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக விளையாடாமல் போட்டிகளை வெளியிலிருந்து கவனித்து வருகிறார் அவர்.
_____________
பொல்லார்டை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர் வலியுறுத்தல்
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ஆதிகாரபூர்வகமாக பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஒரே அணியாக மும்பை உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோரின் மோசமான பேட்டிங் கருதப்படுகிறது. அவ்வப்போது ரோகித் சர்மா சோபித்தாலும் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் தொடர்ந்து மோசமாக பேட்டிங் செய்துவருகிறார்.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் பொல்லார்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். பொல்லார்ட் குறித்து அவர் கூறுகையில், " திடீரென்று இப்போது பார்க்கையில் மும்பை ஒரு நல்ல அணியாக தெரிகிறது. ஆனால் அந்த அணியில் ஒரு உடனடி மாற்றம் தேவை. பொல்லார்ட்-க்கு பதில் டெவால்ட் ப்ரீவிஸ் வர வேண்டும். தொடர்ச்சியாக ரன்கள் எடுக்க திணறிவரும் பொல்லார்டுக்கு எத்தனை வாய்ப்புகள் கொடுப்பீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
____________
டெவன் கான்வே குறித்து முகமது கைஃப் கருத்து
இந்த சீசனில் சென்னை அணியின் தொடக்க போட்டியில் கான்வே-விற்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் சோபிக்காத காரணத்தால் அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின்னர் கடைசி 3 போட்டிகளில் அவரை அணி நிர்வாகம் களமிறக்கியது. அவரும் தன்னை நிரூபித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முஹமது கைப் பாராட்டு தெரிவித்துள்ளார். டெவன் கான்வே குறித்து அவர் கூறுகையில், " கான்வே ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு பிளேயிங் 11-ல் இருந்து கைவிடப்பட்டார். ஆனால் அவர் தற்போது பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து சென்னை அணி அவரை முன்பே இறக்காமல் இருந்ததற்காக வருத்தப்படுவார்கள். அணியின் சிறந்த வீரரை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என கைப் தெரிவித்தார்.
______________
தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய குழு காலிறுதிக்கு தகுதி
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தாமஸ் கோப்பை 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்திய அணி 2வது குழு போட்டியில் தொடக்கத்தில் இருந்தே வெற்றியை நோக்கி பயணித்தது. முதல் போட்டியில் உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் கிதம்பி, கினடாவின் பிரையான் யாங்கை வீழ்த்தினார். இதன்பின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி, ஜேசன் அந்தோணி ஹோ-ஷு மற்றும் கெவின் லீ ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி எளிதில் வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் மற்றும் பி.ஆர். சங்கீர்த் ஆகியோர் விளையாடினர். இதில் இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் பின்பு 5வது போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் மற்றும் விக்டர் லாய் ஜோடி 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியையும் தன்வசப்படுத்தினார். இதனால், இந்திய அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இந்திய அணி ஜெர்மனியுடனான குழு போட்டியில் 5-0 என வெற்றி பெற்று இருந்தது. இதனால், காலிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.