Idhayam Matrimony

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,288 ஆக சரிந்தது

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      இந்தியா
India-Corona 2022 04 17

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,288 ஆக சரிந்துள்ளது. கொரோனா புதிய பாதிப்பை விட அதன் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் அதிகமாக இருந்தது. அந்தவகையில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 3,044 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு ஏற்ற, இறக்கமாக உள்ளது. நேற்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 7-ம் தேதி பாதிப்பு 3,805 ஆக இருந்தது. மறுநாள் 3,451, நேற்று முன்தினம் 3,207 ஆக சரிந்த நிலையில், புதிய பாதிப்பு 3-வது நாளாக குறைந்துள்ளது.

டெல்லியில் பாதிப்பு 1,422 ஆக இருந்த நிலையில் நேற்று முன்தினம் 799 ஆக குறைந்தது. அரியானாவில் 371, கேரளாவில் 324, உத்தர பிரதேசத்தில் 218, மகாராஷ்டிராவில் 121, ராஜஸ்தானில் 102 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 7 ஆயிரத்து 689 ஆக உயர்ந்தது.

கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 6 மரணங்கள் மற்றும் நேற்று முன்தினம் டெல்லியில் 3, கர்நாடகாவில் ஒருவர் என மேலும் 10 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,103 ஆக உயர்ந்தது. கொரோனா புதிய பாதிப்பை விட அதன் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் அதிகமாக இருந்தது. அந்தவகையில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 3,044 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.

இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 63 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 19,637 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 766 குறைவு ஆகும். நாடு முழுவதும் இதுவரை 190 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 84.15 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து