முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
Annamalal 2022-05-14

Source: provided

சென்னை : திருவாரூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை தலைமையில் திருவாரூர் தேர் ஓடும் தெற்கு வீதியை தி.மு.க அரசு கலைஞர் கருணாநிதி வீதி என பெயர் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் கலாச்சாரத்தை மாற்றுவதற்கான முயற்சியுடன் தி.மு.க செயல்பட்டு வருகிறது.0

தி.மு.க ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு இரண்டு சாதனைகளை செய்தது ஒன்றும் மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது மற்றொன்று ஊரின் பெயரை மாற்றுவது என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அண்ணாமலை, பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் மீது திருவாரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து